About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** ஆய்வுக்கூடப் பாடல்(நடவுப்பாடல் டப்பிங்) ****

 சால்ட்டை எடுத்துப்போட்டுச்
 சரியான தண்ணீர் விட்டு
 சோடியம் கார்பனேட் எடுத்துச்
 சோதனைக் குழாயில் போட்டுவைடி!


 புனலைக் குடுக்குறவரே!
 குடுத்துட்டுப் போகுமய்யா!
 குடுத்துட்டுப் போனியினா
 நாங்களுந்தான் பில்டர் பண்ணுவோம்!


ஆனயானை நான் அறியேன்!
(Anion)
கேட்டயானுந் தான் அறியேன்!
(Cation)
சால்ட்டெடுத்து நாங்கலக்கி
கையெல்லாம் ஆசிட்டாகுதே!


நடுவிலே ஸ்டவ்விருக்க
நாலுபக்கம் டெஸ்ட்டியூபிருக்க
மிக்சருந்தான் தெரியாம
இருக்கலாமோ லேப்புலதான்!


ஒண்ணுந் தெரியல
ஊத்தி ஊத்திப் பாத்தாச்சு
வாத்தியார் திட்டாமயிருக்க
ஒண்ணொன்னாத்தான் சொல்லிவாங்க!


மத்த டிபார்ட்மண்டெல்லாம்
ஊரைச்சுத்திட்டு நல்லாயிருக்க!
நீ மட்டும் கெமிஸ்ட்ரி எடுத்து
நாசமாப் போடி நாம்பெத்தவளே(னே)!!


         ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment