About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Monday, November 14, 2011

கணிப்பொறியுகத்தில் நான் ----> *** குழந்தைளுக்கு.."தேங்க்கூம்" ***

கவிதை பிறந்த கதை:
************************
எல்லோருடைய வாழ்விலும்..குழந்தைப் பேறு என்பது ஒரு வரம்.நாம் அனைவருமே ஒரு காலத்தில் குழந்தைகளாய்..
இன்னொரு சமயத்தில் பெற்றோர்களாய்..

"படைத்தல்" இறைவனுக்கு மட்டுமே சாத்தியம் என்றால்..இங்கு ஒவ்வொரு பெற்றோரும் கடவுளே.
இன்று..நவம்பர்-14-2011.குழந்தைகள் தினமாகிய இந்நாளில்..பெற்றோர்களுக்கும்..குழந்தைகளுக்கும்
இந்தக் கவிதையின் வாயிலாக..நன்றி சொல்கிறேன்.


*** குழந்தைளுக்கு.."தேங்க்கூம்" ***
==============================
ஈரைந்து மாத தவத்திற்க்காய்..
இறைவன் கொடுத்த வரம்.


இலக்கணமில்லாத..
எழுத்துருவமில்லாத..
வரைமுறைகள்..வரம்புகள்..இல்லாத..
மொழி.....மழலை!


இப்போதைய குழந்தைகள்..
"இரண்டு கண்ண்ன்"களுக்கு..
பயப்படுவதில்லை என்பதால்..
என்னை வைத்து முயற்சித்தாள்
என் மனைவி..
"ஒழுங்கா சாப்பிடு...இல்லைன்னா..அப்பா வந்துடுவார்"
மழலையில்(ன்)..பதில்..
"அப்போ..அப்பா சாப்பிடட்டும்!".


தூங்காத குழந்தைக்காய்த்..
தாலாட்டுப் பாட..
"வேணாம்பா" என்று என்
வாய்மூடி..கைபேசியில்
பாட்டுக் கேட்கிறது!.


இன்னொரு நாளில்..
பாட்டி வடைசுட்ட கதைசொல்லி..
தூங்கச் செய்யும் முயற்சியின் முடிவாய்..
மீதிக் கதையைச் சொல்லி..
கண்ணம் தட்டுகிறது குழந்தை.
கண்ணயர்ந்து தூங்குகிறாள் மனைவி!.
"தாயுமானவனாய்" இரண்டரை வயது குழந்தை.


படபடக்கும் பட்டாம்பூச்சியை..
பயந்துகொண்டே..ரசிக்கும் குழந்தை.
எது அழகு..
பட்டாம்பூச்சியா..குழந்தையா..
முடிவெடுக்கத் திணறும்..
விசாரனணக் கமிஷனாய் நாங்கள்.


எங்களிருவரில்..யார் குரல்
உச்சரித்து ஒலித்தாலும்..
உடனே வந்து எங்களின் கைபற்றி
"என்னம்மா?" என்கிறது.
வாதியும்..பிரதிவாதியும்..சமாதானமாய்!
அன்பின் சாட்சியே..இங்கே..நீதிபதியாய்.


கைதட்டிப் பாரட்ட கற்றுக்கொடுத்தோம்
விளைவு-"ஏழாம் அறிவி"ன் டாங்லீக்கு
கைதட்டும் குழந்தை!.
உண்மைதான் இறைவனும்..குழந்தையும்
யாரிடத்திலும்..பேதம் பார்ப்பதில்லை.


ஆத்திரத்தில் அறிவிழந்து..
அடிக்கிறேன்..குழந்தையை..
அன்பு குறைந்த ஏமாற்ற்த்தால்..
அழுதபடியே சமாதானமாகும் குழந்தை.
நம்பிக்கைத் துரோகியாய் நான்.


ஒழுகும் மூக்குடன்
ஐஸ்கிரீமுக்கு அழும் குழந்தையிடம்
"காலியாயிடுச்சி" என்றேன்.
"காலி" என்று கைவிரித்துச்
சிரிக்கிறது.-உண்மைதான்..
மரணதண்டனைகும் மேலான..
மன்னிக்க முடியாத குற்றங்கள்..
குழந்தையிடம் சொல்லும் பொய்கள்.


எங்களை பயமுறுத்த நினைத்து
எதையோ செய்யும் குழந்தை
பயந்ததாய் நான்.
சாதித்தாய்ச் சிரிக்கும் குழந்தை.
சத்தியமாய்..நிலவில்
கால்பதித்த..அந்நொடியில்
ஆம்ஸ்ட்ராங் அடைந்த இன்பத்தைவிட
குழந்தையின் இன்பம் அதிகம் இந்நொடியில்.


இதையெழுதும் பொழுதுகூட..
பேனாவேண்டுமென்று கேட்டு அழும் குழந்தை
மழலைக்கு எழுத்துருவம் கொடுக்கும்..
குழந்தைக்கு... விட்டுக்கொடுதுப்..பின்
தொடரும் நான்.
நிச்சயமாய்..குழந்தையிடத்தில்..
தோற்கும்பொழுது எந்தப்
பெற்றோரும்..குறைந்து போவதில்லை..
ஏனெனில்..குழந்தை எங்களின் விழுது.


எத்தணையோ முயன்றும்..இன்னும்
மழலைப் பாடத்தில்..தேர்ச்சியடையவில்லை
நாங்கள்-விளைவு
"ச்சே!" என்று தலையிலடித்து
அலுத்துக் கொள்கிறது..குழந்தை
ஒரு ஆசானாய்!.


ஆங்கிலத்தில் "தேங்க்யூ" என்று
சொல்லிக் கொடுத்தோம்.
மழலையில் "தேங்க்கூம்" என்கிறது.
அப்படியே நாங்களும்-ஆதலால்
எங்கள் சார்பாய்..பெற்றோர்களுக்கும்
குழந்தைகளுக்கும் "தேங்க்கூம்!".


சில நேரத்தில் நாங்கள் பெற்றோராய்..
பல நேரத்தில் குழந்தையே.. பெற்றோராய்..
ஆசானாய்..கடவுளாய்..யாதுமானவனாய்!.


இன்னும்..நிறையய்..
இருக்கிறது..குழந்தையைப்
பற்றிச் சொல்ல...ஆனால்
ஒரு நவம்பர்-14 இல்லை..
14-நவம்பர் மாதங்களிருந்தாலும்..
காணாது..ஆகையால்..
வாழ்த்துக்கள்..மற்றும்.."தேங்க்கூம்"முடன்

   
         ---->"தந்தையுமானவனாய்" பொன்.ஞானப்பிரகாஷ்.