About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Monday, November 14, 2011

கணிப்பொறியுகத்தில் நான் ----> *** குழந்தைளுக்கு.."தேங்க்கூம்" ***

கவிதை பிறந்த கதை:
************************
எல்லோருடைய வாழ்விலும்..குழந்தைப் பேறு என்பது ஒரு வரம்.நாம் அனைவருமே ஒரு காலத்தில் குழந்தைகளாய்..
இன்னொரு சமயத்தில் பெற்றோர்களாய்..

"படைத்தல்" இறைவனுக்கு மட்டுமே சாத்தியம் என்றால்..இங்கு ஒவ்வொரு பெற்றோரும் கடவுளே.
இன்று..நவம்பர்-14-2011.குழந்தைகள் தினமாகிய இந்நாளில்..பெற்றோர்களுக்கும்..குழந்தைகளுக்கும்
இந்தக் கவிதையின் வாயிலாக..நன்றி சொல்கிறேன்.


*** குழந்தைளுக்கு.."தேங்க்கூம்" ***
==============================
ஈரைந்து மாத தவத்திற்க்காய்..
இறைவன் கொடுத்த வரம்.


இலக்கணமில்லாத..
எழுத்துருவமில்லாத..
வரைமுறைகள்..வரம்புகள்..இல்லாத..
மொழி.....மழலை!


இப்போதைய குழந்தைகள்..
"இரண்டு கண்ண்ன்"களுக்கு..
பயப்படுவதில்லை என்பதால்..
என்னை வைத்து முயற்சித்தாள்
என் மனைவி..
"ஒழுங்கா சாப்பிடு...இல்லைன்னா..அப்பா வந்துடுவார்"
மழலையில்(ன்)..பதில்..
"அப்போ..அப்பா சாப்பிடட்டும்!".


தூங்காத குழந்தைக்காய்த்..
தாலாட்டுப் பாட..
"வேணாம்பா" என்று என்
வாய்மூடி..கைபேசியில்
பாட்டுக் கேட்கிறது!.


இன்னொரு நாளில்..
பாட்டி வடைசுட்ட கதைசொல்லி..
தூங்கச் செய்யும் முயற்சியின் முடிவாய்..
மீதிக் கதையைச் சொல்லி..
கண்ணம் தட்டுகிறது குழந்தை.
கண்ணயர்ந்து தூங்குகிறாள் மனைவி!.
"தாயுமானவனாய்" இரண்டரை வயது குழந்தை.


படபடக்கும் பட்டாம்பூச்சியை..
பயந்துகொண்டே..ரசிக்கும் குழந்தை.
எது அழகு..
பட்டாம்பூச்சியா..குழந்தையா..
முடிவெடுக்கத் திணறும்..
விசாரனணக் கமிஷனாய் நாங்கள்.


எங்களிருவரில்..யார் குரல்
உச்சரித்து ஒலித்தாலும்..
உடனே வந்து எங்களின் கைபற்றி
"என்னம்மா?" என்கிறது.
வாதியும்..பிரதிவாதியும்..சமாதானமாய்!
அன்பின் சாட்சியே..இங்கே..நீதிபதியாய்.


கைதட்டிப் பாரட்ட கற்றுக்கொடுத்தோம்
விளைவு-"ஏழாம் அறிவி"ன் டாங்லீக்கு
கைதட்டும் குழந்தை!.
உண்மைதான் இறைவனும்..குழந்தையும்
யாரிடத்திலும்..பேதம் பார்ப்பதில்லை.


ஆத்திரத்தில் அறிவிழந்து..
அடிக்கிறேன்..குழந்தையை..
அன்பு குறைந்த ஏமாற்ற்த்தால்..
அழுதபடியே சமாதானமாகும் குழந்தை.
நம்பிக்கைத் துரோகியாய் நான்.


ஒழுகும் மூக்குடன்
ஐஸ்கிரீமுக்கு அழும் குழந்தையிடம்
"காலியாயிடுச்சி" என்றேன்.
"காலி" என்று கைவிரித்துச்
சிரிக்கிறது.-உண்மைதான்..
மரணதண்டனைகும் மேலான..
மன்னிக்க முடியாத குற்றங்கள்..
குழந்தையிடம் சொல்லும் பொய்கள்.


எங்களை பயமுறுத்த நினைத்து
எதையோ செய்யும் குழந்தை
பயந்ததாய் நான்.
சாதித்தாய்ச் சிரிக்கும் குழந்தை.
சத்தியமாய்..நிலவில்
கால்பதித்த..அந்நொடியில்
ஆம்ஸ்ட்ராங் அடைந்த இன்பத்தைவிட
குழந்தையின் இன்பம் அதிகம் இந்நொடியில்.


இதையெழுதும் பொழுதுகூட..
பேனாவேண்டுமென்று கேட்டு அழும் குழந்தை
மழலைக்கு எழுத்துருவம் கொடுக்கும்..
குழந்தைக்கு... விட்டுக்கொடுதுப்..பின்
தொடரும் நான்.
நிச்சயமாய்..குழந்தையிடத்தில்..
தோற்கும்பொழுது எந்தப்
பெற்றோரும்..குறைந்து போவதில்லை..
ஏனெனில்..குழந்தை எங்களின் விழுது.


எத்தணையோ முயன்றும்..இன்னும்
மழலைப் பாடத்தில்..தேர்ச்சியடையவில்லை
நாங்கள்-விளைவு
"ச்சே!" என்று தலையிலடித்து
அலுத்துக் கொள்கிறது..குழந்தை
ஒரு ஆசானாய்!.


ஆங்கிலத்தில் "தேங்க்யூ" என்று
சொல்லிக் கொடுத்தோம்.
மழலையில் "தேங்க்கூம்" என்கிறது.
அப்படியே நாங்களும்-ஆதலால்
எங்கள் சார்பாய்..பெற்றோர்களுக்கும்
குழந்தைகளுக்கும் "தேங்க்கூம்!".


சில நேரத்தில் நாங்கள் பெற்றோராய்..
பல நேரத்தில் குழந்தையே.. பெற்றோராய்..
ஆசானாய்..கடவுளாய்..யாதுமானவனாய்!.


இன்னும்..நிறையய்..
இருக்கிறது..குழந்தையைப்
பற்றிச் சொல்ல...ஆனால்
ஒரு நவம்பர்-14 இல்லை..
14-நவம்பர் மாதங்களிருந்தாலும்..
காணாது..ஆகையால்..
வாழ்த்துக்கள்..மற்றும்.."தேங்க்கூம்"முடன்

   
         ---->"தந்தையுமானவனாய்" பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கணிப்பொறியுகத்தில் நான் ----> ******* அவள்.. *******

கவிதை பிறந்த கதை:
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தாயும்.

பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தாயை நினைத்து எழுதியது.


******* அவள்.. **********

வேலை நிமித்தமாய்..
வேறுதேசம் சென்று
ஆண்டுகள் சில
ஆனபிறகு திரும்பிய நாளது..

என்னை எதிர்பாராது....
எதையோ எதிர்பார்த்துக்
காத்திருக்கும்...உறவுகள்...

"எப்பிடி இருந்தது வெளிநாடெல்லாம்?"
என்பதிலுக்குக் காத்திராமல்..
என்பெட்டியை ஊடுருவும்
மாமாவின் கண்கள்.......

"அங்கே தங்கம் விலையெல்லாம்
கம்மியாமே?!!" ...தன்கை
கண்ணாடி வளையலை தடவியபடி
தமக்கை....

"மொபைல் வாங்கினியாணா?"
கல்லூரிக் கனவுகளுடன் தம்பி...

"செட்டியாருக்கு இந்தமாசம்
வட்டி குடுக்கலை"
கேள்விக்குறியுடன் அப்பா.

எல்லோருக்கும் பின்னாலிருந்து
என்னை ஏக்கமாய்க்..
கலங்கிய கண்களுடன்
பார்த்துக் கொண்டே..
"சாப்பிட்டியாப்பா?...
சாதம் போடட்டுமா?" என்றவள்
அம்மா!.

 ---------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கணிப்பொறியுகத்தில் நான் ---->***** உண்ணாம...திண்ணாம ******

கவிதை பிறந்த கதை:
************************
   இனக்கவர்ச்சிகும்...நல்ல நட்பிற்க்கும்...காதலுக்கும்...வித்தியாசம் தெரியாமல் பெண்கள் சிறிது பேசிச் சிரித்தாலே..தவறாய்ப்
புரிந்துகொள்ளும் இளைஞர்களுக்கும்...அந்த இளைஞர்களை சரியாய் இனம்கண்டுகொண்டு தங்களுடைய தேவைகளைத் தீர்த்துக்
கொள்ளும் இளைநிகளுக்கும்... இந்தக் கவிதை சமர்ப்பணம்.........


******* உண்ணாம...திண்ணாம ***************

எல்லாமே நன்றாய்தானிருந்தது..
பணிநிமித்தமாய் பரிச்சியமென்றாலும்..
பார்த்த உடனே பிடித்துப்போனது.
எப்போது பேசினாலும்..
என்ன பேசினாலும்..
எதிர்ப்பே இல்லாமல்..
எதிர்பார்ப்பில்லாமல் பதிலளிப்பாள்.
நுனிநாக்கு ஆங்கிலம்...
எதிர்பாராமல் படும் விரல்களின்
ஸ்பரிசம்...
அவளுடன் அருந்தும்
தேநீர் கூடத் தேனாய்......
எல்லாமே நன்றாய்தானிருந்தது..

"புரட்டாசி சனிக்கிழமை..
பெருமாள் கோவில் போயிட்டு
வாப்பா" - அம்மாவின் வேண்டுகோள்.

"நாளைக்கி ஷாப்பிங் போனும்
வர்றீங்களா?"
"போலாமே"....
பெருமாளை பார்த்துக்கொள்ள..
ஆண்டாள் இருகிறாள்..
ஆனால்...அவளை...

"முதல்ல மாயாஜால் போலாம்"
மொழிபுரியாத படத்திற்க்கு
ஆனசெலவு ஜந்நுற்றைம்பது..
ஆனாலும் அவளுடன்
பார்தத முதல் படம்...
ஆறுதல் கொண்டேன்..

"சரியா பசிக்க்லை..
லைட்டா "சப்வே"ல சாப்பிடலாம்"
பர்கரும்..பீட்ஸாவும் என
வந்த பில் தொகை நானுறு...

"அண்ணாச்சிக் கடையில
எண்ணுறு பாக்கி"
அம்மாவின் குரல்...மனதிற்க்குள்.
மாதந்தோறும் வாங்கும்
மளிகைக்கே எண்ணுறுதானம்!!.
ஆனாலும் சாப்பிட்டது
அவள்...!
அதுவும் நன்றாய்தானிருந்தது..

"ஸ்பென்சர் போலாம்"
போனோம்.
பல கடைகள்....
பார்வையிலேயே தேடினாள்..
நிழலெனப் பின்னால் நான்..

"த்ர்ஸ்டியா இருக்கு"
குளிர்பானத்திற்க்குப் பின்
கோல்டு காபியும்..
இன்னொரு கையில் ஜஸ்கீரிமும்..
இதில் கரைந்து போனது நானும்..பணமும்..
ஆனாலும் நன்றாய்தானிருந்தது..

இறுதி முடிவெடுத்து பின்
வாங்கியதென்னவோ நகவெட்டிதான்..
அவள் நகத்துணுக்கில் விரைவில்
அழுக்குச் சேர
ஆண்டவனை வேண்டிக்கொண்டேன்..
ஏனெனில் வெட்டும்பொழுதெல்லாம்
என்நினைவு வரவேண்டுமல்லவா...

ஆக மொத்தம்
ஆயிரத்து எண்ணூறூ...
அவளுக்காக..பரவாயில்லை
அவளுக்காகத்தான்..எல்லாமே

"இரெண்டு மாச பாக்கி தம்பி"
கேள்விக்குறியுடன்
அண்ணாச்சி மனதில்...

எல்லாமே நன்றாய்த்தானிருந்தது..
அதுவரையில்..
கிளம்பும்பொழுது சொன்னாள்...
"போயிட்டு வர்றேங்கண்ணா"
இடியை என் இதயத்திலே
இறக்கிவிட்டு மின்னலென மறைந்தாள்..
அப்போது கூட
ஆட்டோவுக்கு நான்தான்...

அதுயெப்படியடி...........
மூச்சுக் காற்றுகள் உரசிக்கொள்ளும்
தூரத்திலெயமர்ந்து
மொழிதெரியாத படத்தை
பார்த்தபொழுது வராத..
பாசம்.....
பசியேயில்லாமல்...பகட்டுக்காக..
பர்கரும்..பீட்ஸாவுமாய்
புசித்தபோது வராத
பாசம்....

தெருமுனை வளையல்கடை
தவிர்த்து..நகவெட்டி வாங்க
ஸ்பென்சர் வரை
வந்தும்... வராத பாசம்..
எப்படியெடி தேவைகள்
தீர்ந்ததும்.ஊற்றெடுத்தது?!!!!!!!...

இதில் தவறு யார்மீது...

"குருடனுக்கு ஒரே மதி"
--- தவறு என் மீதா?

"காற்றூள்ள போதே
தூற்றிக்கொண்ட" அவள் மீதா?!!

"உண்ணாம..திண்ணாம...
அண்ணாமலைக்குப் பறிகொடுத்தானே
அரோகரா"  - அண்ணாச்சியின் புலம்பல்..

யார்மீது தவறு...இந்த
வயதின் மீதா.....அல்லது
வயது தந்த வாலிபத்தின் மீதா....
ஆதலால் இளைஞர்களே...
பகுத்தறிவோடிருங்கள்..
பக்குவப்படுங்கள்...
இறுதியாய் ஒன்று....
மனதைத் திறந்து வையுங்கள்..
மணிபர்ஸ்கள் மூடியே இருக்கட்டும்..........

         --------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கணிப்பொறியுகத்தில் நான் ---->*** காத்திருக்கிறேன் அவருக்காக ****

கவிதை பிறந்த கதை:
************************
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் இரண்டாம் கட்டம் என்று சொல்லப் படுவது வழக்கம்.
என்னைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் உள்ளங்கைக் கதகதப்பில் இருந்துவிட்டு உலக வாழ்க்கையில்
அடியெடுத்து வைக்கும் தருணமே திருமணப் பருவம். அப்படிப் பட்ட தருணத்திற்க்காக என்னுடைய தோழி காத்திருந்த
நேரத்திலெ அவர் கேட்டுக் கொண்டதற்க்கிணங்க அவருக்காக நான் எழுதிய கவிதை இது. அவருடைய திருமண நாள் 04-Dec-2008.
       

*** காத்திருக்கிறேன் அவருக்காக ****
அலுவலகத்தின் அறிமுகவிழா..
அலுவலகத்தைப் பற்றி அறிந்த
அன்றே அவரைப் பற்றியும்
அறிந்து கொண்டேன்...
பிரகாசமான பெயர்
"பிரகாஷ்".

ஆகஸ்ட் பதினைந்து.....
பாரதத்திற்கு விடுதலை கிடைத்த
அந்நாளில் ..அவர் மனதிலே
சிறைபட்டுப் போனேன்....
சில நாட்கள் மின்னஞ்சல்..
வாயிலாகத் தொடர்ந்த நட்பு...
பின் புன்சிரிப்பும்...கைபேசியழைப்புமாய்...

என் தாயுமானவளே
எனக்குத் தோழியுமனவள்...
அவளிடத்திலே பகிர்ந்தபொழுது
அன்பொழுகச் சொன்னள்..
"யோசித்துப் பார்
தீர்க்கமான முடிவெடு
எடுத்தபின் திரும்பிப்பார்க்காதே
நம்பிக்கையிருந்தால் நம்பிக் கைபிடி..
அவனே உன் வழித்துணையாகவும்..
வாழ்க்கைத்துனையகவும் இருப்பான்"

எதிபாராதிருந்த ஒரு நாளில்
எதிர்பர்ர்த்திருந்த கேள்வி
அவரிடமிருந்தது.....
"நான் உன்னை நேசிப்பதாய்ச் சொன்னால்
என்ன உன் பதில்?"
ஒரு வரிக்கேள்வியானாலும்
விடை என் வாழ்வல்லவா....

தாயின் ஆலோசனையால்
தயாராய் இருந்தேன்...
முன்பே எடுக்கப் பட்ட
முடிவென்றாலும் சற்றே பதட்டம்தான்.
ஆனாலும் .அவர் முன்மொழிய ..
தாயிடத்திலே பேசுங்கள்" என்று
வழிமொழிந்தேன்.

அவரும் என் தாயும்
பேசிக்கொண்டிருந்த அந்த
தருனத்தில் என் இதயத்துடிப்பை
சிறிது தூரம்வரை இருந்த
எல்லோராலும் கேட்க முடிந்தது

அது பெண்பார்க்கும் படலம் இல்லை
சம்பிரதாயங்கள் இல்லை....
சாஸ்திரங்களும் குறுக்கே இல்லை..
பார்த்தபின்னே முடிவெடுக்கும் பழக்கமும்மில்லை
வீட்டிற்குப் போய்க்கடிதம் போடும்
விடையும் இல்லை.

முடிவாய்..தெளிவாய்..சொன்னார்.
"பிடித்திருக்கிறது..
நம்பிக்கொடுங்கள் ..ஒரு மகனாய்
நானிருப்பேன்" .
 அவ்வளவுதான்..

அதோ..கூப்பிடும் துரத்திலே 
டிசம்பர் 4
இதுவரை .....
நான் காணக்கிடைக்காத
நாட்காட்டியை தேடித் தேடிக்
கிழிக்கின்றேன்
பருவக் காற்றிலே
படபடக்கும் நாட்காட்டியின்
தாள்கள்.. நானும் அப்படித்தான் ..

நாட்கள் நகர நகர
இனம் புரியதொரு உணர்வு..
இந்த வருடம் மட்டும்
அக்டோபருக்குப் பின்
டிசம்பர் வராதா.. என்றொரு ஏக்கம்

இது வாழ்க்கையின்
இன்னொரு கட்டம்...
கனவாய் இருந்த காதல்..
கண்முன்னே நனவாகும் காலமிது

காதல் இங்கே வாழ்க்கையாய்...
காதலன் இங்கே கணவனாய்...

எத்தனையோ திருமணத்தில்
எங்கோயொரு மூலையில்
இருந்த எனக்கு .....
இங்கே திருமணம்
காதலாகிக் கசிந்துருகும் இரு
மனங்களின் திருமணம்
உணர்வுகளை பரிமாறிக்கொள்ள
துவளும்பொழுது தோள்சாய..ஒரு
துணைவரும் நாள் டிசம்பர் 4

இனிமேல் ..டாண்டம் யோசிக்கும்
நேரத்திலே..இரவு உணவு பற்றியும்
யோசித்தாக வேண்டும்.....
"மாவுமிச்சம் இருக்கு தோசை
ஊத்திக்கலமா?" --- நான்
"சண்டே மாயாஜால் போலாமா?
பாரதி" --- அவர்

ஒரு வளமான வாழ்க்கை
காத்திருக்கிறது எனக்காக
வாழ்ந்தாக வேண்டும்
காத்திருக்கிறேன் நானும்
காதலுடன்....." அவருக்காக "
                                                                      
               -----------> பொன்.ஞானப்பிரகாஷ்.   

கணிப்பொறியுகத்தில் நான் ---->*** காத்திருக்கிறேன் அவளுக்காக ****

கவிதை பிறந்த கதை:
************************
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் இரண்டாம் கட்டம் என்று சொல்லப் படுவது வழக்கம்.
என்னைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் உள்ளங்கைக் கதகதப்பில் இருந்துவிட்டு உலக வாழ்க்கையில்
அடியெடுத்து வைக்கும் தருணமே திருமணப் பருவம். அப்படிப் பட்ட தருணத்திற்க்காக நான் காத்திருந்த
நேரத்திலெ எழுதிய கவிதை இது. என்னுடைய திருமண நாள் 03-Sep-2008.


*** காத்திருக்கிறேன் அவளுக்காக ****

இன்னும் ஓரிரு நாட்கள்...
இந்த துனையில்லாத..தனித்த
வாழ்க்கையின் முடிவுக்காலம்...

இஷ்டம் போல் வீடு திரும்பி..
முறையான
உணவு தவிர்த்து...உறக்கம் தவிர்த்து..
விடுமுறை நாளா...
நண்பகல் வரை தூங்கி...பின்
நானும் எழுந்து ...
நண்ப்ர்களை எழுப்பி..
குளித்துக் கிளம்பி..

"எங்க போறது?"
"தெரியலை...முதல்ல ரூமப்பூட்டு..
திருவான்மியூர் பஸ் ஸ்டாண்ட் போலாம்
அப்புறம் யோசிப்போம்"
பேருந்து வர.."மௌண்ட்ரோடு போலாம்"

பல படங்களின் கதை
பற்றி யோசித்து...அலசி ஆராய்ந்து..
பின் கதையில்லாத படம் பார்த்து
வெளியே வந்து புலம்பி
"நல்லவேளை..தியேட்டர்ல ஓரமா
இருட்டுல உட்கார்ந்தோம்..
இல்லைன்னா..விக்ரம் நம்மளையும்
சுட்டிருப்பான்..."
"சரி விடுங்க.. இனிமே தமிழ்ப்
படம் பாக்கிறதில்லை..இது
இந்த தியேட்டர் மேல சத்தியம்.."

"சரி..பீச் போலாம்"
கடலலையில்..கலையாத
வீடு கட்டி...
"எனக்கு பஜ்ஜி..
வினோத்க்கு ஸ்வீட்கார்ன்"

கணணித் துறையின் வளர்ச்சி
கலாச்சார சீரழிவு.....
விஞ்ஞானம் பற்றி வியந்து....
அரசியல் வியாதிகள்.. என
ஆவேசமாய்ப் பேசும்பொழுதே....
"அங்க பாருங்க.. அந்தப் பச்சை....
உங்களையே பார்க்கிறமாதிரி..."
உடனே நாடு மறந்து..வீடு மறந்து...
"எங்கடா"
உடனே "ஜொள்ளு விடுவீங்களே.."
சரி..டின்ன்ர் எங்கே?
"செட்டிநாடு ட்ரீட்".......

"சரி அப்புறம்"
"ட்ரைவ் இன் போலாம்"
"படத்துக்கே போக்கூடாதுன்னு..ஒரு
மானஸ்தன் சத்தியம் பணிணானே"

"அது அந்த தியேட்டர்மேல தான"

படம் முடித்து..
ஊரே உறங்கும் பொழுது....
நள்ளிரவு வீடு திரும்பி..
"தூக்கம் வராது.. பக்கத்து ரூம் ரோசன்கிட்ட
எதாவது சிடி இருந்தா வாங்கு...."

சுகமோ..துக்கமோ.. சமமாய்ப் பகிர்ந்து..
"இந்தாங்க டேப்லட்...
இட்லி சாப்ட்டு..அப்புறம்
சாப்பிடுங்க"

புகை பிடிக்காத..
மது..மாது..மாமிசம் உண்ணாத..
வரம்புமீறாத..வாழ்க்கை...

இது எல்லாமே...
இன்னும் ஓரிரு நாள்தான்...
பிறகு...
எனக்கே..எனக்கென்று அவள்..
அவளுக்காய் நான்..
எங்களுக்கென ஓர் உலகம்

அவள்:
"கொஞ்சம் உருளைக்கிழங்கு வேணுங்க..
ராத்திரி தோசை சுடலாங்க...
உமாப்பொண்ணு மயிலாப்பூரா?
இந்த சட்டையை துவைச்சிடலாமா...

நான்:
பீச்சுக்குப் போலாமாடி....
உங்க அம்மாக்கு போன் பண்ணியா?...
சண்டே சம்பத் வருவாண்டி லஞ்சுக்கு
தலைவலியா..தைலம் பூசவா...

அலுவலகப் பரபரப்பின் போது..
"என்னங்க சமைச்சிட்டிருந்தேன்..
கேஸ் காலியாயிடுச்சி"...
"எதுக்குடி காலைல வாந்தியெடுத்த.."

இது...
வாழ்க்கையின் அடுத்த கட்டம்..
மாற்றங்கள் ஒன்றே
மாறாதிருக்கும் இந்த வாழ்க்கையில்..
நம்முடைய ஈடுபாடும்..ரசனையுமே..
நம்மை உண்மையாய் வாழவைக்கும்...

இங்கே இழப்பதெற்கென்று
எதுவுமில்லை.....
கற்றுக்கொள்ளவும்..ரசிக்கவும்
நிறைய்ய்ய்ய்ய் இருக்கிறது...

ஆதலால்..
அவளுக்காக......
காத்திருக்கிறேன்...காதலுடன்..
இதோ தொட்டுவிடும் துரத்தில்
செப்டம்பர் 3..........

வாருங்கள் நண்பர்களே.........
வாழ்த்துவதற்க்கு..
வாழ்ந்துதான் பார்க்கலாம்.....

     என்றும் நட்புடன்
             ---------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கணிப்பொறியுகத்தில் நான் ---->**** அப்பா ****

கவிதை பிறந்த கதை:
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தந்தையும்.

பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தந்தையை நினைத்து எழுதியது.


 ======= அப்பா =========
நம்மில் எத்தனை பேருக்குத்
தெரியும்.. இந்தச்
சுமை தாங்கி பற்றி..

சுகமென்றலும் சோகமென்றாலும்
அன்னையின் தலைவருடலுக்கு
ஏங்கும் மனமே...இங்கே
எட்ட நின்றபடி
பாசத்தைப் பணமாய்
மாற்றிப் பொழிந்து கொண்டிருக்கும்
அந்த மனம் - "அப்பா"

கருவாக்கியது தாயென்றால்
உருவாக்கியது தந்தையல்லவா...

நஞ்சுக்கொடியை நான் துறந்து
பதினெழு மாதமாகியும்
நடவாதிருக்க..லாவகமாய் என்
விலாவில் துண்டைப் போட்டு
நடை பழக்கிக்கொடுத்தவர்..

எடுத்த் வாந்தியைப் பிடித்தவள்
அன்னை என்றால்...
பிடித்த கைஅலம்ப
நீரோடு நின்றவர்....

என் வைரஸ் காய்ச்சலுக்கு
மாரியம்மாளுக்கு மாவிளக்கு எடுப்பதாய்
என் அம்மா வேண்டிக்கொள்ள..
தினமும் மருத்துவனிடத்திலெ
மன்றாடி வீட்டிற்கே வரச்செய்து
வைத்தியம் பார்த்தவர்.......


இன்றெனக்கு டாடாவோ
போர்டோ எந்தக் காரனாலும்
வாங்க வசதியிருப்பினும்...
சிறுவயதில்..அவர் வாங்கிக் கொடுத்த
பச்சைக்கலரில் சிவப்பு விளக்குப்
பொருத்திய அந்த தகரக்காருக்கு
ஈடாகுமா..இவையெல்லாம்...

தீபாவளி நாளில்
கிடைத்த ஊதியத்தில்
எனக்குப் புதுத்துணிகள்....
குலாப்ஜாமூனும் ...குருவிவெடியும்...

அவருக்கு...
உடுத்தியிருந்த துணியை
துவைத்து..உலர்த்தி...
உடுத்துவார் ..மறுநாள்..என்னோடு..
"பாத்தியா?.. அப்பாக்கும் புதுச்சட்டை!"
விபரமறியாமல் சிரிப்பேன் நான்.

என் குடும்பத்தைப் பற்றிக்
கேட்போரிடமெல்லாம்..
பெருமையாய்ச் சொல்வேன்..இப்படி..
"அப்பா வாகன ஓட்டுநர்...
அம்மா வாழ்க்கையின் ஓட்டுநர்..."

ஆறாம் வகுப்பின்..
ஓவியப்போட்டியின்போதுதான்
வண்ணத்துப் பூச்சியை
துரிகையில் சிறைபிடிக்க
முடியாது நான் திணற..
மூன்றே நிமிடத்தில்..அவர்
முடித்ததைப் பார்த்து அதிர்ந்தேன்
நான்..
விட்டும் விடாத ஏக்கத்துடன்
சொன்னார் "நானும் அப்பல்லாம்
நல்லா வரைவேண்டா...."

வாழ்க்கைச்சக்கரத்தில் சிக்கி
தன் திறமை மறந்து...
காணமல் போனவர்கள்
பட்டியலில் அப்பா...

எந்த ஊர் சென்றாலும்
அந்த ஊரின் சிறப்போடு
வருவார்.......
"நேத்து தூத்துக்குடி போனேன்..
மொறுமொறுப்பான.ரஸ்க் இருக்கும்..
இன்னொமொரு நாள்...
கேரளா போனேன்..இந்தா சிப்ஸ்"

நாங்களிருவரும் சேர்ந்து..
வெளியெ சென்றுவிட்டு
வீடுதிரும்பும்போது கூட
உள்ளிருப்போரை அழைக்காமல்..
என் பெயரைச் சொல்லியெ
கதவைத் தட்டுவார்...
"பிரகாஷ் கதவத்தெறப்பா"..
புல்லரித்துப் போவேன் நான்..


சுகமோ...துக்கமோ..
பகிர்ந்துகொள்ள தாயைத்தேடிடும்..
மனமே.. சற்று உற்றுநோக்கினால் தெரியும்..
எட்டநின்று...ஏங்கிக்கொண்டிருக்கும்
மனம் தந்தையினுடையது

அதிகபட்சம் அப்பாவிடத்திலே
நம்முடைய சம்பாஷணை
இதாய்த்தானிருக்கும்
அப்பா:
"எத்தானாவது ரேங்க்?
கோடிவீட்டு கந்தசாமி பையன்
எப்பிடி படிக்கிறான்..நீயும் இருக்கியே..
செலவுக்குப் பணம் இருக்கா?
ரோட்டில பாத்துப்போனும்..
யமஹா வாங்காதே..."

நாம்:
ஏழாவது ரேங்க்...
அவனுக்கு கதையெல்லாம் எழுதத்
தெரியாது..நான் எவ்ளோ மெடல்......

நானூறு வேணும்..பிக்னிக்
போணும்...


கல்வி முடிந்து..ஊரைத்துறந்து...
பணிக்கமர்ந்ததும்...
"பார்த்து செலவு பண்ணுடா..."
"அப்பா தீவாளிக்கு உங்களுக்கு
சபாரி எடுத்திருக்கேன்"
"ஏண்டா காசைக் கரியாக்கிறே..
சபாரியெல்லாம் வேணாம்ப்பா.."
வெட்கத்துடன் சிரிப்பார்..

"சரி..நீங்க ஜ டெஸ்ட் போலயா?"
அப்பா:
"எதுக்குப்பா இந்த வயசிலெ...

ஆமா ஏதோ கண்ணாடி விக்கிதாம்
அதப்போட்டா கம்ப்யூட்ட்ர்ல ஒர்க்
பண்ணும்போது..பாதிக்காதாம்.."

இன்னும்..
நிறைய்ய்ய இருக்கிறது
அப்பாவைப் பற்றிச்சொல்ல..

ஆனால் நேரமில்லை..
ஒரு வார விடுப்பில்
ஊருக்குச் சென்று
அவர் மடியில் தலைசாய்த்து
நிறைய்யப் பேசவேண்டும்...
அம்மாவிடம் முன்பு பேசியதை...
அப்பா எட்டநின்று ஏக்கத்துடன்
கேட்டதை..அவர் தலைகலைத்து
நான் சொல்லியாகவேண்டும்...

ஆதலால்.. நண்பர்களே..
நீங்களும் என்போல் விடுப்பெடுத்துச்
செல்லுங்கள்..
நிறைய்ய்ய்ய்ய இருக்கிறது..
அப்பாவிடத்தில் பேச.................


         ---------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கணிப்பொறியுகத்தில் நான் ---->******** அம்மா *********

கவிதை பிறந்த கதை:
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தாயும்.

பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தாயை நினைத்து எழுதியது.


******** அம்மா *********
எந்த மொழிகளாலும்...
எல்லா மொழிகளிலும் உள்ள
அடைமொழிகளாலும் விளக்கிடமுடியாத
அன்பின் இலக்கணம்...


நான்...
பாதுகாப்பாக...சந்தோசமாக....
இருந்த காலம்...
அவள்.. கருவறைக்குள்
இருந்த காலம்.............


ஏழாயிரம் கொடுத்து வாங்கிய
மெத்தை தராது விட்ட
தூக்கத்தை....
என் தாயின் முழங்கைக்
கதகதப்பில் ...உணர்ந்தேன்.


ஆயிரம் கவலைகள் மனதிலிருந்தாலும்
அவள் கைவிரல்கள் என் தலைவருடும்
நேரத்தில் மறப்பேனே இவ்வுலகியல்புகளை
எடுப்பேனே மறுபிறவியொன்றை..


அவள்... பெரும்பாலும்
கோவிலுக்குச் சென்றதில்லை....
ஏனென்றால்... பதிலுக்கு..
சிறிதாய்ப் புன்னகைத்து..
"எங்கடா... நேரம்" என்பாள்.

அவளைப் பொறுத்தவரையில்...
எங்களைப் பேணிக்காப்பதே...
அவள் கடமை ......

நானும் போவதில்லை... ஏனெனில்
தெய்வத்துடன் இருக்கையில்..
பிற வழிபாடுகள்... தேவையில்லை...


பரிசுகள்...பாராட்டுக்கள்..ஏன்
மாநில விருது பெற்றூத்...
திரும்பும்பொழுது கூட..
பதக்கத்தை கையில் வைத்துக்
கொண்டு அவள் கேட்ட் முதல்
கேள்வி......
"சாப்பிட்டியா?"..........


வைரஸ் காய்ச்சலென
நான் படுத்துக்கொள்ள..
இரவு..பகல்.. பாராது..
விழித்திருந்து..நான்
எடுத்த வாந்தியை..
பிடித்தாளய்ய.. கையில்..

பாவி நான்..
தவறுதலாய்..அவள்
எச்சல் டம்ளரில்
காபி கொடுத்தாளென்று.. திட்டியதோ
கொஞ்சமல்ல..

மறந்தேன்.. ஒன்றை..
நானே அவள் எச்ச்ல்தானே.......
அவள் உதிரத்தின் மிச்சம்தானே நான்..


என்னைப் பிரசவிக்க..
நடந்த முயற்சியில்
நஞ்சுக்கொடி சுற்றிக்கொண்டு
சுவாசத்திற்க்கு நான் திணற..
தாயா...சேயா...என
மருத்துவன் கைவிரிக்க....
துணிந்து சொன்னாளாமே..

"குழந்தையைக் காப்பாற்றி
கணவரிடத்திலே கொடுங்களெ"ன்று...
அய்யோ! கடவுளே!...
என்ன தவம் செய்தேன்..
இவள் வயிற்றில் நான்..
பிறக்க........


கல்லுரிக் காலத்தில்
கட்டடித்துவிட்டுச் சென்ற
முதல் சினிமா..
உள்ளம் உறுத்தியதால்..
வீடு வந்ததும்.. நான்
உண்மை சொல்ல
ஆத்திரப்படாமல்.. இரவில்
அருகினில் துங்கும்பொழுது
அவள் சொன்ன..கதை..
அந்த.. திரைப்படத்தையும் மீறி
என்னை யோசிக்க வைத்தது...
விளைவு.. இன்றுவரை...
எதையும்.. மறைத்ததில்லை ...அவளிடத்தில்..


எந்த உடை உடுத்தினாலும்....
"ராசா மாதிரி இருக்கே" என்பாள்.
"எந்த ஊர் ராசா - பீட்டர் இங்லேண்ட்
போட்டிருக்கார்?" என்றால்..
"எனக்கு நீ ராசாதாண்டா" என்பாள்...


முதன்முறை பெங்களூர்
பயணித்த பதிமூன்றூ மணிநேரத்தில்..
பதினைந்து கைபேசி அழைப்புக்கள்..
"எங்கடா இருக்கே?.. சாப்பிட்டியா"...


எங்கள் வீட்டில்... பெண் குழந்தைகள்
இல்லை.. அதனால்..அம்மாவே
என் சகோதரியாய்... தோழியாய்..
என் குழந்தையாய்..குமரியாய்..


எதிர்வீட்டுச் சிறுவனுடன்
பக்கத்து பள்ளிமைதானத்தில்
விளையாட்டாய்... நான் இருக்க..
ஏதோ விபரீதமென்று பயந்தவள்... பின்
விபரமறிந்து..மைதானத்திற்கே வந்து
விளாசினாளே.. வீடுவரை...
"போவியா? சொல்லாம போவியா?
என்று...


அழுதுகொண்டெ அப்பாவிடம்..
குறைகூற..முதுகைத் தடவியவாறு..
சொன்னரே.. அப்பா...
"டேய்.. அம்மாடா... அவளுக்கு
பாசத்தைக் கூட கோவமாத்தாண்டா
காட்டத் தெரியும்... பாவம்டா"


ஆனாலும் சமாதானமாகாமல்...
சாப்பிடாது..நான் தூயில்கொள்ள
முயற்ச்சிக்க....
அருகே அமர்ந்து என்னை
அரவனைத்து...என் கண்ணீர்...
துடைத்தபடி...அவள் அழுதாளே..
"நீ காணமாப்போயிட்டியோன்னு..
அம்மா பயந்துட்டேண்டா....."


செல்லமாய்க் கோபித்தவாறே..
அப்பாவிடம் சொல்வாள்.....
"மாமியார்க் கொடுமையைக் கூட
அனுபவிச்சதில்லைங்க...இவன்
கொடுமை தாங்கலை..."


சரியான நேரத்தில்..
சரியான வயதில்..
சரியான விசயத்தைச் சொல்லிக்கொடுத்த
பல்கலைக் கழகம் அவள்...
"பக்கத்து வீட்டு விஜி
பெரிய மனுசி ஆயிட்டாடா"
"இல்லம்மா..அவ என்னைவிட
உயரம் கம்மி..அப்புறம் ஏன்
பெரிய மனுசின்னு சொல்றே??"
அப்பாவியாய் நான்...
"இல்லடா..அப்பிடின்னா...."


உலக விசயங்களையும்..
தன் அனுபவங்களையும்..
சமமாய்ப் பகிர்ந்தளித்தாள்.

"உனக்கு ஒரு நல்ல பொண்ணா
பார்க்கணுண்டா...
நம்ம ரேகாவையே கல்யாணம்
பண்ணிக்கிறியா? - என்னை மாதிரியே
உன்னை பத்திரமா பாத்துப்பா.."


நானும் பிள்ளையாரைப் போல்தான்..
அவனோ பெற்றார்களைச் சுற்றி வந்து
பழம் மட்டும் பெற்றான்..
நான் என் அன்னையைப் போல்
குண்ம்கொண்ட ரேகாவைப் பெற்றேன் - மனைவியாய்!

இன்னும்
எவ்வளவோ இருக்கிறது...
என்னம்மாவைப் பற்றிச் சொல்ல...
எதைச் சொல்ல்..
எதை விட....
எனக்குள்ளே குழப்பம்..
எனக்குள்ளே கூச்சம்...
எனக்குள்ளே மகிழ்ச்சி..
எனக்குள்ளே நெகிழ்ச்சி..
எனக்குள்ளே அன்பு...
எனக்குள்ளே பாசம்....
எனக்குள்ளே அம்மா .!!!!!.........

         --------> பொன்.ஞானப்பிரகாஷ்

கணிப்பொறியுகத்தில் நான் ---->******** நன்றி ********

கவிதை பிறந்த கதை:
************************

பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்...எனக்குள்..தொலைந்து
போயிருந்த என்னை மீட்டெடுத்துக் கொடுத்தது..தோழி காயத்திரியும்..FSS நிறுவனமும்.
அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!.

இந்தக் கவிதையானது... நிறுவனத்தின் 2008ம் ஆண்டு வருடாந்திர விழாவை முன்னிட்டு அவர்களுக்கு நன்றி பாராட்டி எழுதியது.

******** நன்றி ********
அறிவிப்பு வந்த உடனே
அவசரப்படாமல்..
நண்பன் நச்சரிப்பையும்
பொருட்படுத்தாமல்....
ஷிப்ட் ஷெட்யூல் பார்த்து
முடிக்க வேண்டிய வேலையை
நினைத்துப் பின் மெயிலனுப்பி...

"பாண்டிச்சேரியாம்.....நாலைந்து பேருந்தாம்...
ஜி.ஆர்.டி.யில் உணவாம்..
கடலில் விளையாட்டாம்.... இப்படி
ஒரு நாள் சுற்றுலாவுக்காக
பல நாளாய்ப் பேசி...எதிர்பார்ப்புக்கள்
கரைபுரண்டோடி..
காத்திருந்த நாளும் வர....

கூடியிருந்த குழுக்களில்
முகமறிந்து...முகவரி
தெரியாத... சக ஊழியருடன்
புன்னகைத்து......கைகுலுக்கி..
பேருந்தில் ஏறியமர்ந்து....
செய்த பயணத்தில்

இருக்கைகளையும்..ஜன்னல் கம்பிகளையும்
இசைக் கருவிகளாக்கிய
இளையராஜாக்களையும்.......

கிழக்குக் கடற்கரைச் சாலையின்
காது கிழியும் சத்தங்களுக்கிடையே
சாதகம் செய்யாது..பாடிய
பல சுசீலாக்களையும்....

சுற்றம் மறந்து...
சூழ்நிலை மறந்து...
படித்த பட்டம் மறந்து...
பதவி மறந்து...
குழந்தைகளாய் மாறி...
குதுகலித்த.. என் சக தோழர்களைப்
பார்க்கும் போது......
உணர்ந்த உண்மை சொன்னது...

நம் ஊர் தவிர்த்து...உறவு தவிர்த்து.
முறையான உணவு தவிர்த்து...
துக்கம் தவிர்த்து... பலநாள்
தூக்கம் தவிர்த்து...
சுத்தமில்லா விடுதி அறை...
மாற்றாத தலையனண உறை...
கழுவாத குடிநீர்க் கேன்....
வாங்காது விட்ட நண்பனின் கடன்...
10 பைசா கட்டணத்தில்....
அம்மாவிடம் பேசும்
ஆறுதலான அரைமணிநேரமும்..

பல ஏ.டி.ம். கார்டுகளும்...
சில மீல் பாஸ்களுமாய்.....
பொருளீட்டும் பொருட்டு
"நம்மை"யே நாம் அடகு
வைத்திருக்கும்            
இந்த இயந்திர வாழ்வில்...
தற்காலிகமாய் "நம்மை" மீட்டுக்கொடுப்பது
இது போன்ற அலுவலக நிகழ்வுகளே
என்பதால்.........

நம் அனைவரின் சார்பாய்.........
நிர்வாகத்திற்கு.... நெஞ்சார்ந்த நன்றிகளுடன்.....

        

         --------> பொன்.ஞானப்பிரகாஷ்

"தமுஎச" வில் நான் -->**** வறுமை ****

கவிதை பிறந்த கதை:
************************
 இந்தக் கவிதை(?!!) என்னுடைய கல்லூரிக் காலத்தில் நான் எழுதி..பின் ..
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கதின் அருப்புக்கோட்டை நகரக்கிளையில் இனணைந்து ஒரு
தளிராய் வளர்ந்து கொண்டிருந்த ஆரம்பக்காலத்தில்(கி.பி 1997ல்) ..நான் பகிர்ந்து கொண்டது,


 இந்தக் கவிதையின் மூலம் தேசியக் கொடியை இழிவு படுத்துவது என் நோக்கம் அல்ல..
50,000 கோடி ரூபாயை இராணுவத்திற்காகச் செல்வழிக்கும் இந்தியாவில்..
இன்னும் மின்சாரம்,சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் ஏராளம்...
உணவு,உடை போன்ற அடிப்படைத் தேவைகள் கூடக்கிடைக்காத..
பல கோடி மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்...
அதன் பாதிப்பே இந்தக் கவிதை....
உடுத்த் ஒரு கந்தாலாடை கூட இல்லாத ஒரு குப்பந்தான் என் கவிதையின் நாயகன்...



**** வறுமை ******
எனக்கு அந்தக் குப்பனைப்
பார்த்ததும் கோபம்
வருகிறது...

பிறகென்ன..
சுதந்திரப் போராட்ட் தியாகிகளின்
அன்பளிப்பாய் கிடைத்த கொடியை...

வருடத்திற்கிருமுறை...
பள்ளிக்குழந்தைகளுக்கு..
விடுமுறையும்..இனிப்பும்
தந்திடும் கொடியை...

மந்திரிகளின் காரின் முன்
பறந்து வரும் பட்டமாய்த்
திகழ்ந்திடும் கொடியை...

இப்படியெல்லாம்..
பெருமை பெற்ற அந்த
தேசியக் கொடியை எடுத்து
அந்தக் குப்பன்
தன் மானம் மறைத்திருக்கிறான்
என்றால் எனக்குக்
கோபம் வராதா?..

ஏனெனில்.. நேற்று..
நானல்லவா அதை
உடுத்தியிருந்தேன்...

          --------> பொன்.ஞானப்பிரகாஷ்

"தமுஎச" வில் நான் --> *** வரதட்சணை *****

வாரச்சந்தையில்....
பல் பார்த்து...
நிறம் பார்த்து...
பால் கறவை பார்த்து
வாங்கி வந்த மாட்டிற்க்கு
இது... மூன்றாவது பிரசவம்...


கல்யாணச் சந்தையில்...
விலை திகையாமல்...
இன்னும் கன்னியாய் நான்.......

    
             --------> பொன்.ஞானப்பிரகாஷ்

"தமுஎச" வில் நான் --> **** விதவை ****

கவிதை பிறந்த கதை:
************************
 இந்தக் கவிதை(?!!) என்னுடைய கல்லூரிக் காலத்தில் நான் எழுதி..பின் ..
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கதின் அருப்புக்கோட்டை நகரக்கிளையில் இனணைந்து ஒரு
தளிராய் வளர்ந்து கொண்டிருந்த ஆரம்பக்காலத்தில்(கி.பி 1997ல்) ..நான் பகிர்ந்து கொண்டது.


********* விதவை ************
காரியம் முடிந்தவன்..
அங்கே கலர்..கலரான..
துணிதனில் கண்ணாடிச் சட்டத்திற்க்குள்...

அவன் காரியத்தை முடித்தவள்..
இங்கே.. வெறும் நெற்றியும்...
வெள்ளைப் புடவையுமாய்.....
மூச்சை விட்டவனுக்கு..
முழுதாய் ஒரு பொட்டும்..
முழம் பூவும்..

கைம்பென்னாய் நிற்கும்.. இவளோ..
கானலானா நெற்றியும்...
களையிழந்த கூந்தலுமாய்...

ஈராயிரம் ஆண்டிலும்..
"இதென்னமா கோலம் என்றேன்?"
"முற்ப்போக்கு பேசாதடா.. இந்தா
முப்பாத்தம்மன் கோவில் திருநீறு
முன்நெற்றியில் வைத்துக்கொள்ளடா...
என்றாள் என் தாய்!"

         --------> பொன்.ஞானப்பிரகாஷ்

"தமுஎச" வில் நான் --> **** ஒரு கொடியின் நிறம்! ****

கவிதை பிறந்த கதை:
************************
 இந்தக் கவிதை(?!!) என்னுடைய கல்லூரிக் காலத்தில் நான் எழுதி..பின் ..
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கதின் அருப்புக்கோட்டை நகரக்கிளையில் இனணைந்து ஒரு தளிராய் வளர்ந்து கொண்டிருந்த

ஆரம்பக்காலத்தில்(கி.பி 1997ல்) ..நான் பகிர்ந்து கொண்டது,

ஒரு கொடியின் நிறம்!
==================
விளக்கங்கேட்டதற்கு
விளக்கிச் சொன்னார்கள்!

சிவப்பு நிறம்
இந்துச் சாமியார்களின்
செந்நிற ஆடை
என்றும்...


வெண்மை நிறம்
கிறித்துவப் பாதிரியார்களின் தூய அங்கி
என்றும்...


பச்சைநிறம்
முகம்மது நபியின் மதங்காட்டும் நிறம்
என்று!

ஆனால் உண்மையில்
ஆராய்ந்து பார்த்தால்.....


சிவப்பு நிறம்
மதவெறியியால் மாண்டுபோன
மனிதர்களின் இரத்தத்தையும்


வெண்மை நிறம்..
அம்மாண்டுபோன மனிதர்களின்
விதவை மனைவிகளின்
வெள்ளைச் சேலையையும்


பச்சை நிறம்...
மதம்பிடித்துத் திரியும்
மதவெறியர்களில்
அழிந்துபோன
பச்சிளங்குழந்தைகளையும்
பசுமையான வயல்களையுமே
காட்டுகின்றது!
        
               ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

"தமுஎச" வில் நான் --> **** கடுதாசி ****

கவிதை பிறந்த கதை:
************************
கி.பி.1993ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குழந்தைத் தொழிளார்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பேசிய , ஒரு பிஞ்சுக்குழந்தையால் எனக்குள்
ஏற்பட்ட பாதிப்பின் விளைவே..இந்தக் கவிதை.
******* அந்தக் குழந்தை..தன்னுடைய பெற்றோர்களால்..ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் "அடகு" வைக்கப்பட்டிருந்தது.*****
இந்தக் கவிதை(?!!) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கதின் அருப்புக்கோட்டை நகரக்கிளையினுடைய "கலை இலக்கிய இரவி"ல் (கி.பி.1997ல்)
பிரபலமான எழுத்தாளர் திரு மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் முன்னிலையில் என்னால் எழுதி...வாசிக்கப்பட்டது.
அநேகமாய்.."ஈன்றபொழுது பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன்...." என்பதற்க்கிணங்க என் பெற்றோர்கள்..என்னால்
மகிழ்ந்த நேரம் அது.


   **** கடுதாசி ****
==================== 
 அப்பன் ஆத்தாவுக்கு
   நீங்க பெத்தபொண்ணு
 அருக்காணி ஆசையா
   எழுதுற கடுதாசி இது.


நீங்க நல்லாயிருக்கீங்களா?
  ஒங்களுக்காக நா இங்க
நல்லாயிருக்கேன்.


ஏழெட்டு வருசமுன்னு
  ஏன்னு கேக்குமுன்ன
 பட்ட கடனுக்காக
  பெத்த கடனைக் கொடுத்து


பத்து வருசங்கழிச்சு
  திரும்ப வாங்கிக்கிறேன்னு
திருப்பிக் கிடுதேன்னு என்னை
  கொண்டாந்து விட்டீக


வருசம் பத்தாச்சு
 வர்ற வழி காணலியே
திருப்பிக் கிடுதேன்னுட்டு
  திரும்ப இங்க வரல்லியே


மேஸ்திரி முருகனுந்தான் மேல
  கைய வைக்கிறான்
ஈன்னு பல்லைக் காட்டி
  இளிச்சிட்டு நிக்கிறான்


திரியை உருட்டையில
  திடீர்னு  வந்திடுறான்
வர்றியா வர்றியான்னு
  வம்பாக் கூப்புடுதான்


வயசுக்கு  வந்துட்டேன்னு
  வள்ளியம்மா சொன்னா
பத்திரமா இருக்கோன்னும்னு
  பார்வதியுஞ் சொன்னா


எப்ப வருவீக
  என்னைக் கூப்புட்டு
போவீக- அந்தக்


கம்மாக் கரையும்
  கரிசக் காடும்
கம்மங் கஞ்சியும்
 கண்னாடி டீச்சரும்                 
ஆலமரமும்
  அக்கம்பக்கம் வீடுகளும்
ஆட்டு மந்தையும்
  அரளிப்பூச் செடியும்

எங்கண்ணுலயெ நிக்குது
  கனவுலதான் வருகுது.

வெரசா வந்து என்னை
  வீட்டுக்கு கூட்டிப் போங்க


முன்னபின்ன தெரியாத
  முருகங்கூட என்னை
நாளுக்கு மூணுதரம்
  தானாக் கூப்புடுதான்


பட்டணம் போகலாம்
  "தொழிலு" பார்க்கலாம்
பங்களா வாங்கலாம்
  பட்டு உடுத்தலாம்


கலர்கலரா துணியும்
  காதுக்கு கம்மலும்
கைநெறையக் காசும்
  காரவீடும் காரும்

வாங்கலாமுன்னு
  வாக்கு குடுக்கான்
வலியக் கூப்புடுதான்


"என்ன தொழிலு"ன்னேன்
  தோதான வேலைன்னான்
படுத்துக்கிட்டேப் பார்க்கலாம்
  பத்திரமா இருக்கலாமுன்னான்


சீக்கிரமா வந்தாக்க
  சிவகாசி விட்டு
ஊருக்கு வாரேன்
  முடியாதுன்னு சொன்னா
முருவங்கூட பட்டணம் போறேன்.


                                             ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** வாழ்க்கை ****

பிறப்பு..வளர்ப்பு...
கல்வி...வேலை..
திருமணம்..குழ்ந்தைகள்...
பதவி...பாரட்டு....
வயது மூப்பு...பின்
இறப்பு...இவற்றில்....

என்னுடைய பெயரை..மட்டும்
அழித்துவிட்டுப் பார்க்கையில்..
கோடானுகோடி சாராசரிகளில்
காணாமல் போயிருந்தேன் ..
..... நான்...

         --------> பொன்.ஞானப்பிரகாஷ்

கல்லூரிக் காலங்கள் --> **** வீடு ****

என் ஜாதகத்தில்...
நாலாம் வீட்டில் ராகுவும்...
ஏழாம் வீட்டில்  கேதுவும்..
மூணாம் வீட்டில் குருவும்..
இருப்பதால்...
வாடகைக்கு வீடு கிடைக்காமல்..
அலைந்தபடி..... 
நான்.


    ---------> பொன்.ஞானப்பிரகாஷ்

கல்லூரிக் காலங்கள் --> **** முரண் ****

புத்தம் புதிதாய்
நித்தம் ஒரு புடவை....
ஜவுளிக் கடை பொம்மை.

ஏக்கத்துடன் தன்
கிழிசல் பார்க்கும்..
ரோட்டோரப் பிச்சைக்காரி.

         --------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** சேதுவும்...கேதுவும் ****

ஜாதகத்தில்...
ஏழாம் வீட்டிலிருந்த
கேதுவின் பார்வை பட்டதால்தான்
என் தங்கை வீட்டை விட்டு
ஓடிப்போனள் என்றான்
ஜோசியக்காரன். 


ஆனால்..
உண்மையில்..அவள்
எதிர்வீட்டு சேதுவின்
பார்வை பட்டே ஓடிப்போனாள்...
            
              ---------> பொன்.ஞானப்பிரகாஷ்

கல்லூரிக் காலங்கள் --> **** தத்துவத்தின்படி..நான் ****

பசித்திரு!
இருக்கிறேன்
ஒரு வேளைச் சோற்றுக்கும்
வழியில்லாமல்

தனித்திரு!
இருக்கிறேன்
ஆதரிப்போரில்லா அனாதையாய்
தனியாய் தன்னந்தனியாய்...


விழித்திரு!
இருக்கிறேன்
தெருவோர கொசுக்களின்
தேவையைப் பூர்த்தி செய்து....

              -----------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** ஜாதி (வி)ஒழிப்புணர்வு ****

ஜாதி ஒ(வி)ழிப்புணர்வு
பற்றிய கூட்டம்!
முதலில் பேசியவனுக்கு
ஒரு சிலர்
மட்டும் கைதட்டினார்கள்!

அடுத்து
பேசியவனுக்கும் ஒருசிலர்
மட்டும் கைத்தட்டினார்கள்!
விசாரித்ததில் விவரம்
தெரிந்தது!

அவனவன் சாதிக்காரனுக்கு
மட்டும்
கைத்தட்டினார்களென்று!

இறுதியில்
பேசியவனுக்கு எவருமே
கைதட்டவில்லை!

ஏனென்றால்
அவன் பேசியது
ஜாதி ஒழிப்புணர்வு
பற்றி!

        
         ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** பரிசு! ****

எடுத்த மதிப்பெண்ணிற்கு
அரசுதந்த பரிசு
ஒரு
வெள்ளித்தட்டு!

ஆனால்
அதில் போட்டுச்
சாப்பிட உணவுகள்
ஒன்றுமில்லை!


         ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** உப்புத் தண்ணீர் ****

ஆத்தோரம் நிக்க வச்சி.....
   அவசரமாப் போனவரே!
 காத்தோட வந்திடுறேன்னு.....
   காத்திருக்கச் சொன்னவரே!


காத்திருந்தேன்! காத்திருந்தேன்!
   காலந்தான் மாறிப்போச்சு
 காதோட சொன்னவாக்கு
   காத்தோட கலந்து போச்சு


 கோடைகாலம் வந்துருச்சி
   கொளத்துலதான் தண்ணியில்ல
 ஆடிமாசம் வந்துங்கூட
   ஆறு அதா வத்திப்போச்சி!


 தண்ணியெடுக்க வந்தவக
   தட்டழிஞ்சி நிக்கயிலே
 தண்ணிநெறைய ஓடுறஆறு
   தள்ளிக் கொஞ்சம் இருக்குதுன்னு.....


 பாத்தவங்க சொன்னவுடனே
   பரவசமாப் போனவக
 கொடத்துல மோந்துபுட்டு
   குடிச்சுந்தான் பாத்துபுட்டு


 உப்புத்தண்ணி இந்தத்தண்ணீன்னு
   உரக்கக் கத்துனாவ.
 கடல்தண்ணி உப்புக்கரிக்கும்.....
   ஆத்துத் தண்ணி அதிசயந்தான்னு.....


 ஊரு உலகம் பேசுனாக.....
   உன்னை நெனைச்சி நான்
 வுட்ட கண்ணீரு இப்படி
   ஆறா ஓடுதுன்னு.....

 ஆருக்குத் தெரியும் மச்சான்?- அது இந்த
 ஆறுக்குத்தான் தெரியும் மச்சான்.


         ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** வாழ்க்கைக் கடலில்...****

 ***** முதன் முதலில் வாழ்வைப் பற்றி எழுதிய பெரிய கவிதை மிகப்   பெர்.......ர்.......ய்.......ய......து! ******


 விடிகாலைச் சூரியன் விழித்துவிட்டான்!
 தெருவிலோ பால் வண்டியின் மணியோசை!
 கண்னைக் கசக்கியபடி கையில் செம்புடன்
 வந்தவள் வாங்கியபாலில் தன் முகம்பார்த்தாள்!
 

 காசுகேட்டதும் கணவனைக் குறைகூறினாள்!
 அலுத்தக்கொண்டான் பால்காரன்
 அதிகாலையில் அவள் கடன் சொன்னதிற்காக!
 

 ஏழரை மணிக்கு கொட்டாவியிடன் வாயைத்திறந்தவன்
 காபியையும் அதனுள் ஊற்றிக் கொண்டான்!
 எட்டு மணிக்குச் சாப்பிட அமர்ந்தவன்
 சட்னியில் குறை சொன்னான்!
 உப்பு அதிகமென்று!
 

 உறக்கத்தை தவிர்த்து
 உதவிக்கு வந்தால்
 உப்பு குறையுமென்று
 உரக்கக் கத்தியவளுக்குப் பதிலாய்
 பறந்து வந்தது இட்லித்தட்டு!
 சிதறி விழுந்தது குழந்தையின் முகத்தில்!
 

 ஆணாதிக்கம் பற்றிப் பேசிய
 அவளின் கண்ணம்
 அறைபட்டதால் வீங்கியது!
 

 அலறியபடு அழுத குழந்தைக்கு
 அவசரமாய் அழுக்குச் சட்டையை மாட்டியபடி
 அடித்துக் கொண்டே சமாதானஞ் சொன்னாள்!
 

 புத்தகப்பை உள்ளேயும்
 குழந்தைகள் வெளியேயுமாய்
 வந்துநின்ற ரிக் ஷாவில்
 குழந்தையைத் திணித்தாள்!
 

 அவசரமாய் வீட்டைப் பூட்டிக்கொண்டு
 முறைப்புடன் மூலைக்கொரு பக்கமாய்
 அலுவலகம் சென்றார்கள்!
 

 அங்கோ....
 மேலதிகாரியின் சுடுசொற்கள்!
 சக ஊழியனின் சலிப்பான புலம்பல்!
 எரிச்சலாயிற்று!
 எண்ணிப்பார்த்தான்
 பின்
 புரிந்து போயிற்று
 வாழ்க்கையின் தத்துவம்!
 புன்னகைத்துக் கொண்டான்!
 

 மனம் முழுதும் மனைவியின் நினைவு!
 விளைவு
 மல்லிகைப் பந்தல் கைகளில் படர
 வீட்டு வாசற்படியேறினான்!
 

பரிவோடு எதிர்கொண்டாள் மனைவி
 பாசத்துடன் அவள் கரம்பிடித்தான்!
 மல்லிகைப் பந்தல் மனைவியின் கூந்தலில்!
 

 குழந்தை அவனைப் பார்த்தது
 மறுபடியும் தட்டு பறக்குமோ?
 

அள்ளி அணைத்துக் கொண்டான்!
தொலைக்காட்சி முன் அமர்ந்தான்
 விளைவாய்...
 குளியல் சோப்பையும் குளிர்பானத்தையும்
 விளம்பரமாய்க் கண்டான்!
 விளம்பரத்தினூடே நிகழ்ச்சியுங்கண்டான்!
 

 மனம் லேசாகிப் போனது
 மனைவியிடம் மன்னிப்புக் கேட்டான்!
 விவாகரத்து செய்வோரும்....
 சாமியாராய்த் திரிவோரும்....
 

 அவனுக்குச் சிரிப்பினைத் தந்தார்கள்!
 வாய்விட்டுச் சிரித்தான்!
 காரணங்கேட்ட மனைவியின்
 காதருகில் விவரஞ் சொன்னான்!
 அவள் வெட்கிப் போய் "ச்சீ!" என்றாள்!
 

 உற்சாகம் பிறந்தது
 உறக்கம் மறந்தான்!
 விசயமற்று பேசினார்கள்..
 விடிகாலை வரைக்கும்!
 

 அதிகாலை நேரத்தில் அயர்ந்துவிட்டார்கள்!
 அதற்குள் ஆதவன் அடிவானத்தில்
 விழித்திருந்தான்!
 வீதியிலோ பால் வண்டியின் மணியோசை!
 

 கண்னைக் கசக்கியபடி கையில் செம்புடன்
 வந்தவள்
 கணவனைக் குறைகூறினாள்!
 மறுபடியும் அதே நிகழ்வுகள்!
 பறந்தது இட்லித்தட்டு!
 சிதறியது குழந்தையின் முகத்தில்!
 

வீங்கிய கண்ணமும்
 வீண்பிடி வாதமுமாய் மீண்டும்
 அதே வாழ்க்கை!
 இவனோ "என்(தலை) விதி" என்றான்!
 அவளோ "வீணாயிற்றே என் வாழ்வு"
 என்றாள்!

 வீண்பிடிவாதமும் வெற்றுச்சமாதானமுமாய்
 நாட்கள் நகர்கின்றன!
 அந்நிய நாட்டவன்
 அங்கிருந்(தே)து சொன்னான்!
 இந்தியர்கள்தான் வாழ்வின்
 சுவையை ரசிக்கிறார்களென்று!
 இங்கே
 இவன் புலம்புகிறான்!
 "பிறந்தால் அங்கே பிறந்திருக்க வேண்டுமென்று!"


          ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** ஆய்வுக்கூடப் பாடல்(நடவுப்பாடல் டப்பிங்) ****

 சால்ட்டை எடுத்துப்போட்டுச்
 சரியான தண்ணீர் விட்டு
 சோடியம் கார்பனேட் எடுத்துச்
 சோதனைக் குழாயில் போட்டுவைடி!


 புனலைக் குடுக்குறவரே!
 குடுத்துட்டுப் போகுமய்யா!
 குடுத்துட்டுப் போனியினா
 நாங்களுந்தான் பில்டர் பண்ணுவோம்!


ஆனயானை நான் அறியேன்!
(Anion)
கேட்டயானுந் தான் அறியேன்!
(Cation)
சால்ட்டெடுத்து நாங்கலக்கி
கையெல்லாம் ஆசிட்டாகுதே!


நடுவிலே ஸ்டவ்விருக்க
நாலுபக்கம் டெஸ்ட்டியூபிருக்க
மிக்சருந்தான் தெரியாம
இருக்கலாமோ லேப்புலதான்!


ஒண்ணுந் தெரியல
ஊத்தி ஊத்திப் பாத்தாச்சு
வாத்தியார் திட்டாமயிருக்க
ஒண்ணொன்னாத்தான் சொல்லிவாங்க!


மத்த டிபார்ட்மண்டெல்லாம்
ஊரைச்சுத்திட்டு நல்லாயிருக்க!
நீ மட்டும் கெமிஸ்ட்ரி எடுத்து
நாசமாப் போடி நாம்பெத்தவளே(னே)!!


         ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** காதல் ****

 ஓ! மானிடர்களே!
 ஒரு நிமிடம் நில்லுங்கள்!
 ஒழுங்காய்ப் புரிந்து கொள்ளுங்கள்
 காதலைப் பற்றி!
 கண்சிமிட்டுவதும் கட்டுயணைப்பதும்(மே)
 காதலல்ல- அது காமம்!

 கருவறையினுள் உள்ள தன்
 குழந்தையிடம் பாசங்கொள்கிறாளே
 ஒருதாய்! -அதுதான் காதல்!

 கண்ணெதிரே கண்டிப்பும்
 கண்ணயர்ந்ததும் அன்பும் காட்டுகிறாரே
 தந்தை- அதற்கு பெயர்தான் காதல்!

 நிழல்தரும் மரத்துடன்
 மழலைமொழியில் பேசுகிறதே
 ஒரு பறவை - அத்ற்குப் பெயர்தான் பறவை!
 வான் முகிலும் உயர்மலையும்
 தவிப்பாய் தழுவிச் செல்கின்றனவே
 அதற்குப் பெயர்தான் காதல்!

 அதோ
 ஆழ்கடல் தன் அலையனுப்பிக்
 கரையைத் தொட்டுத் தொட்டுப்
 பேசுகிறதே!

 அதற்குப் பெயர்தான் காதல்!
 ஈராயிரம் ஆண்டிலும் கூட
 இன்னும் பிதற்றுகிறீர்களே
 காதலிப்பதாய்!
 அது- காதலல்ல! காமம்!
 வாலிபத்தின் வெளிப்பாடு!
 விதியின் விளையாட்டு!
 அவ்வளவே!

 இனியேனும்
 காதல் என்று சொல்லி
 கனவில் மரத்தைச் சுற்றாமல்
 மனதைப் பக்குவப்படுத்துங்கள்!

         ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** நீயும்..நானும்..****

கல்லூரிக்கு நான் வந்தேன்!
 கல்வி கற்றிடத் தான் வந்தேன்!
 கண்ணால் உன்னைக் காணுமுன்
 கன்னியமாய் நான் இருந்தேன்!

 நீ உன் இதழ்திறந்து மூடினால்
 இங்கு
 என் இதயம் திறந்து மூடுதே!

 உன் மிதிவண்டி நீ மிதிக்க
 நான் மதிகெட்டு உனைத் தொடர்கிறேன்!
 உன் சுண்டுவிரல் நுனிதனில்
 என் சொர்க்கமதைக் காண்கிறேன்!
 தென்றலாய் நீ அன்னம்போல் நடந்திட
 புயலாய் என்மனம் அலைபாயுதே!
 நீ உன்கண்களால் காவியம் எழுதிட
 நான் அதைக்கண்டுதான் கவிதை எழுதுகிறேன்!

 உன் கால் கொலுசு நான் பார்த்திட
 என் இமை இங்கு மூட மறுக்குதே!
 இதை நான் காதல் என்று கூறமாட்டேன்!
 ஆனால் -பிறர்
 இதை காமம் என்றும் கூறிட விடமாட்டேன்!

 வில்லொடித்து மணமுடிக்க நீ ஒன்றும்
 புரணாச் சீதையல்ல! புதுமைப்பெண் ராதை!
 அதனால் தான்
 சொல்லெடுத்து வர்ணிக்கிறேந் உன்னைச்
 சொந்தங்கொள்ள நினைக்கிறேன்!

 வெறும் அழகைக் கண்டு நான் உன் மீது
 ஆசைப்படவில்லை?.... பிறகு....
 காரணம் புரியவில்லை எனவே- இக்
 கவிதைக்கும் முடிவில்லை!

 நம்  இருமணம் இணைந்து
 திரு மணத்தில் முடிந்திட
 என் ஒரு மனம் ஆசைப்பட்டால்- பாவம்
 உன் மனம் என்ன செய்யும்?

 நான்
 உன்னிடம் எதை எதிர்பார்க்கிறேன்
 உடலையா? உள்ளத்தையா?
 அழகையா? அறிவையா?
 புரியவில்லை எனக்கு!

 உன் கால்தடமதை
 என் வழித்தடமாய்க் கொள்ள
 நினைத்தேன்!- அதைக் கூறினால் எங்கே
 உன் கைத்தடம் என் கண்ணமதில்
 பதிந்திடுமோ என்ற எண்ணத்தில்
 என் விழித்தடத்தால் உன்னைப் பார்த்தபடி நான்.


 இது
 வாலிபத்தின் வெளிப்பாடோ!
 இல்லை
 விதியின் விளையாட்டோ?
 விடைதெரிந்தால் கூறிவிடு
 விதி என்றால் விட்டு விடு
       இப்படிக்கு
    ................................
 

 இதில் நான்
 கையெழுத்திட்டால் என்
 தலையெழுத்தே மாறிப்போகும்
 அதனால் தான்
 சொல்லெழுத்தில் விளையாடிவிட்டு
 வெள்ளெழுத்தாய்
 மறைந்துவிடுகிறேன்!

        
           ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** ர (ம,பி,ப,கு)ணம் ****

  நான்
  உன் மனம் வேண்டும் என்றேன்!
  இல்லையேல்
  என் பிணம் வரும் என்றேன்!
 

  நீ!
  எனக்குப் பணம் வேண்டும் என்றாய்!
  அதுவே
  என் குணம் கூட என்றாய்!
  இறுதியில் எனக்கு
  மிஞ்சியதென்னவோ ரணம் மட்டும்தான்!

         
                   ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** ஓரங்களில்.. ****

   நான்..
   உன்கடை விழிப்பார்வைக்காக
   கடையோரத்தில் காத்திருந்தேன்!
   எதற்காக!- உன்
   மனதோரத்தில் இடங்கிடைக்கும்
   என்ற நம்பிக்கையில்!
  

   ஆனால் -நீயோ
   என்னை உன்
   விழியோரத்தில் பார்த்துவிட்டு
   வழியோரத்தில் ஒதுக்கிவிட்டாய்!
   எனவே நான் இப்போது
   கடலோரத்தில் மிதக்கிறேன்!
           
             ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கல்லூரிக் காலங்கள் --> **** வீட்டுக்கொரு மனிதம் ****

   இப்போதெல்லாம்.....
   வீட்டுக் கவலைகளிலும்
   அலுவல் அவசரத்திலும்
   கரண்சிக் கனவுகளோடு
   காற்றாய்த் திரிவது.....   கார்பன் நச்சுக்களால்
   மாண்டுபோன.....   மனிதர்கள்தான்.....
  

   அரிசிப்பற்று... பால்பற்று
   ஜவுளிப்பற்று.... மளிகைப்பற்று
   என்ற சுயநலப் பற்றுக்க்களுக்கிடையில்
   சிறுநீர்கழிக்கும் நேரம் கூட
   நாட்டுப்பற்று இல்லாமல்
   திரியும் இந்தக் கூட்டம்...
   மனிதர்கள் அல்ல
   மனிதப்பிண்டங்கள் கொண்டது.
  

  ஒவ்வொரு பிண்டமும்
  'குணம்' என்பதை மறந்து
  'பணம்' என்பதையே கொள்கையாய்க்
  கொண்டன.
  இயந்திரயுலகத்தில்....
  'இண்டெர்நெட்' அவசரத்தில்
  'குளோனிங்' ஆராய்ச்சியில்
  'எய்ட்ஸ்' பயத்தில்....
  'எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில்'
  ஆவியாய்த் திரிவது
  இறந்து விட்ட....
  மனிதர்கள் மட்டுமல்ல....
  அவர்களோடு இறந்துபோன
  மனிதங்களும்தான்.
 

  இனி
  வீட்டுக்கொரு மரம் கூடத்
  தேவையில்லை...
  வீட்டுக்கொரு மனிதம் தேவை.
 

  ஆம்!
  இப்பொழுது வீட்டிற்குள்
  இருப்பதெல்லாம் சுயநலக்
  கூண்டிற்குள் அடைபட்டுக்
  கிடக்கும் அஃறிணைகள்தான்
  அவற்றின் எண்ணங்கள்
  எல்லாம் ஒன்றுதான்
 

  "நான்! என் வீடு!
   என் தாய்! தந்தை!
   என் மனைவி! மக்கள்"
   தவறில்லை அதில்.
  

  ஆனால் அவற்றில்
   சில நொடிப்பொழுதாவது
   சுயநலக் கரையான்கள்
   அரித்து அரித்து
   இற்றுப்போன 'சமூகச்சுவர்களைப்
   பற்றி சிந்திக்கலாம்.
 

 "நான் என்பதும்
   என் வீடு என்பதும்
   நீ மட்டுமல்ல.
   உன்னைச் சுற்றியுள்ள
   உன்னைச் சார்ந்துள்ள சமூகம்
   ஆம்!
   யோசித்துப் பார்!
   நன்றாய் யோசித்துப் பார்!
  

   உன்
   பணத்தையும்  குணத்தையும்
   வெளிப்படுத்துகின்ற ஆடை
   இருக்கிறதே........அதனுள்ளே
   இருக்கும் நூலைப் பார்!
   நூலில்லை அது!
  

  கண்காணாத இடத்தில்
   கரிசல் மண்ணில்
   களையெடுத்துக் கொண்டிருக்கின்றதே
   ஒரு கறுப்புத்தங்கம்
   அத்ன் உழைப்பு!
   ஆம்!- அந்த
   முகம் தெரியாத விவசாயியின்
   உழைப்பு!

  
  இந்த எந்திர உலகில் சகலமும் மறந்து
   உயர்ந்த கையின் உதவியால்
   "ச்சட் சடக் ச்சட் சடக்"
   என்று எழும் ஓசையையே
   இசையாய் நினைத்து
   வாழ்வில் உயராது பள்ளத்தில்
   இருக்கும்- அந்த
   முகம் தெரியாத நெசவாளியின்
   உழைப்பு!


   பேருந்திலிருக்கும்...
   புகைவண்டியிலிருக்கும்.....
   தன் வாழ்வின்
   வறுமைக்கோடுகள்
   வயிற்றில் தெரிய
  நெற்றி வியர்வை
  நிலத்தில் சிந்த பாடுபடும்
  அந்த....  சுமை தூக்கும் தொழிலாளியின்
  உழைப்பு!....
  இப்படி...
  உன் மானம் மறைக்கவே
  தன் மானம் பாராது
  உழைக்கும் அந்த
  உலகைப் பார்
  இப்போதாவது உணர்ந்து கொள்!
  இனியாவது 
  உன் எண்ணத்தில்
  உனக்கான எண்ணத்தை-இவ்
  உலகிற்காக ஒருசில
  நாழிகைப் பொழுதாவது
  நிறுத்தி வை!
  இனியாவது   உன் வாழ்வின்
  அகராதியில்.....
  நான்....
  எனக்கு....
  என்னுடைய......
  என்பதற்கான அர்த்தங்களை
  அறிந்துகொள்.
  இனி....
  உனக்குள் மனிதம் வளரும் வரை
  உன் வீட்டு மரத்தின்
  வளர்ச்சிகூட தடைபடட்டும்
  தவறில்லை.
  முதலில்
   நாம் மனிதம் வளர்ப்போம்
   மனிதர்களை வளர்ப்போம்
   மனிதநேயம் வளர்ப்போம்
   மனிததர்மம் வளர்ப்போம்
   பின்
   மரங்களை  வளர்ப்போம்!!


                -----> பொன்.ஞானப்பிரகாஷ்.

Friday, October 28, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** கல்வியும் காதலும்! ****

**** கல்வியும் காதலும்! ****

தேர்வும் வந்தது!
 தேர்வு முடிவும் வந்தது!
 சான்றிதழ்கள் புறக்கணிக்கப்பட்டன!
 சாதி மதங்கள் பார்க்கப்பட்டன!
 

காசு க்ல்விக்கு காணிக்கையாக்கப்பட்டன!
 கல்லூரியின் கதவுகள் திறக்கப்பட்டன!
 கனவுகள் மிதந்தன பெற்றவள் நினைவில்!
 மாணவன் கண்களிலோ வண்ணக் கனவுகள்!

 வேண்டாத செயல்கள் அவனுக்கு
 விருப்பமாயின!
 வேடிக்கை நிகழ்வுகள் அவனின்
 வாடிக்கையாயின!

 'காதல்' எனும் மாயை அவனை
 ஆட்கொண்டது!
 'காதல்' அவனுக்கு வேதமாயிற்று!
 அம்பிகாபதியும் அமராவதியும்
 அவனின் ஆசானானார்கள்!

 விளைவு!
 கல்வி அவனுக்குக் கசந்தது!
 கல்லூரியைக் கண்டாலே வெறுப்பாயிற்று
 'மாயை'யிலிருந்து விடுபட்டபோது
 காலம் கடந்திருந்தது!
 கல்வி அவனை ஒதுக்கியது!
 கல்லூரி அவனை விலக்கியது!

 பெற்றோர்களுக்கோப் பெரும் இடி!
 பேரதிர்ச்சியால் அவன் மனதில் பலத்த அடி!
 காரணம் பலகூறப் பற்கள் அசைந்தன!
 காலம் பதில் கூறியது!
 ஆம்!
 காலான் அவனை அழைத்துக் கொண்டான்!
 கண்ணீர் கசிந்தன பெற்றோர் கண்களில்!

                
                                        ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

Save the Indian Rupee!



Subject: Save the Indian Rupee!

CAN WE DO IT ? ESPECIALLY WITH MORE INDIANS BEING ABROAD AND ATLEAST ONE IN EACH MIDDLE CLASS FAMILY ? NO HARM IN TRYING THOUGH - OPINIONS MAY DIFFER -GIVE A THOUGHT . . LET US DO WHAT WE CAN ! ! !

YOU CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY BY FOLLOWING FEW SIMPLE STEPS:-


I got this article from one of my friend
s, but it's true. I can see this in day to day life.

Here's a small example:-

Before 12 months 1 US $ = IND Rs 39
After 12  months, now 1
$ = IND Rs 50


Do you think US Economy is booming? No, but Indian Economy is Going Down.


Our economy is in your hands....

 
INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries, is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down. The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation.

More than 30,000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages, etc... which are grown, produced and consumed here.


A cold drink that costs only 70 / 80 paisa to produce, is sold for Rs.9 and a major chunk of profits from these are sent abroad. This is a serious drain on INDIAN economy.


We have nothing against Multinational companies, but to protect our own interestsm we request everybody to use INDIAN products only atleast for the next two years. With the rise in petrol prices, if we do not do this, the Rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future.



What you can do about it?1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.
2. ENROLL as many people as possible for this cause.....


Each individual should become a leader for this awareness. This is the only way to save our country from severe economic crisis. You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.


All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.


LIST OF PRODUCTS

COLD DRINKS
:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE, and MASALA MILK...


INSTEAD OF  COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE


BATHING SOAP
:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA


INSTEAD OF  LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE


TOOTH PASTE
:-
USE  NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK


INSTEAD OF  COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT
.

TOOTH BRUSH
: -
USE PRUDENT, AJANTA , PROMISE


INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B


SHAVING CREAM
:-
USE GODREJ, EMAMI


INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE


BLADE
:-
USE  SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA


INSTEAD OF  SEVEN-O -CLOCK, 365, GILLETTE


TALCUM POWDER
:-
USE  SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS


INSTEAD OF  PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER


MILK POWDER
:-
USE  INDIANA, AMUL, AMULYA


INSTEAD OF  ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.


SHAMPOO
:-
USE  LAKME, NIRMA, VELVETTE


INSTEAD OF  HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE


MOBILE CONNECTIONS
:-

USE BSNL, AIRTEL


INSTEAD OF HUTCH


Food Items
:-

Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma


INSTEAD OF  KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W


Every
INDIAN product you buy makes a big difference. It saves INDIA. Let us take a firm decision today.

BUY INDIAN TO BE INDIAN - We are not against of foreign products.


WE ARE NOT ANTI-MULTINATIONAL. WE ARE TRYING TO SAVE OUR NATION. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM. WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.

THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY. THE CURRENT TREND IS VERY THREATENING.

MULTINATIONALS CALL IT GLOBALIZATION OF INDIAN ECONOMY. FOR INDIANS LIKE YOU AND ME, IT IS RE-COLONIZATION OF INDIA. THE COLONIST'S LEFT INDIA THEN. BUT THIS TIME, THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES.


WHO WOULD LIKE TO LET A "GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY?


PLEASE REMEMBER: POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE


RUSSIA, S.KOREA, MEXICO - THE LIST IS VERY LONG!! LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY. LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.


FINALLY, IT'S OBVIOUS THAT YOU CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE. SO GIVE UP AT LEAST ONE ITEM FOR THE SAKE OF OUR COUNTRY!



Please spare a couple of minutes here for the sake of India.
"LITTLE DROPS MAKE A GREAT OCEAN."

Thursday, October 27, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** கவிதை ****

**** கவிதை ****

கவிதை எழுத வேண்டும்
என்றார்கள்!
''கவிதையா?''- இத்தருமமிகு
தமிழ்நாட்டில்  கவிதைக்கா பஞ்சம்!

எடுத்தேன் எழுதுகோலை!
எழுதினேன் கல்வியின் கவலநிலைப் பற்றி!
எழுதினேன்  அரசியலின் அவலநிலைப் பற்றி!
இடம்பெற்றன! ஆம்!
இடம்பெற்றன!
அலுவலகக் குப்பைக் கூடையில்!
கலங்கினேன்! தெளிந்தேன்!
கற்பனைக் குதிரையைத்தட்டிவிட்டேன்!
கவிகள் சீறிப்பாய்ந்தன!
பரிசுகள் பலபெற்றன!
கவிக்கடவுள் என்றனர்!
கவி இளவரசனானேன்!

புரியவில்லை இந்தபட்டங்களை பற்றி!
புரிந்தது இவ்வுலகைப் பற்றி!


                         ----------> பொன்.ஞானப்பிரகாஷ்.