**** கல்வியும் காதலும்! ****
தேர்வும் வந்தது!
தேர்வு முடிவும் வந்தது!
சான்றிதழ்கள் புறக்கணிக்கப்பட்டன!
சாதி மதங்கள் பார்க்கப்பட்டன!
காசு க்ல்விக்கு காணிக்கையாக்கப்பட்டன!
கல்லூரியின் கதவுகள் திறக்கப்பட்டன!
கனவுகள் மிதந்தன பெற்றவள் நினைவில்!
மாணவன் கண்களிலோ வண்ணக் கனவுகள்!
வேண்டாத செயல்கள் அவனுக்கு
விருப்பமாயின!
வேடிக்கை நிகழ்வுகள் அவனின்
வாடிக்கையாயின!
'காதல்' எனும் மாயை அவனை
ஆட்கொண்டது!
'காதல்' அவனுக்கு வேதமாயிற்று!
அம்பிகாபதியும் அமராவதியும்
அவனின் ஆசானானார்கள்!
விளைவு!
கல்வி அவனுக்குக் கசந்தது!
கல்லூரியைக் கண்டாலே வெறுப்பாயிற்று
'மாயை'யிலிருந்து விடுபட்டபோது
காலம் கடந்திருந்தது!
கல்வி அவனை ஒதுக்கியது!
கல்லூரி அவனை விலக்கியது!
பெற்றோர்களுக்கோப் பெரும் இடி!
பேரதிர்ச்சியால் அவன் மனதில் பலத்த அடி!
காரணம் பலகூறப் பற்கள் அசைந்தன!
காலம் பதில் கூறியது!
ஆம்!
காலான் அவனை அழைத்துக் கொண்டான்!
கண்ணீர் கசிந்தன பெற்றோர் கண்களில்!
------> பொன்.ஞானப்பிரகாஷ்.
தேர்வும் வந்தது!
தேர்வு முடிவும் வந்தது!
சான்றிதழ்கள் புறக்கணிக்கப்பட்டன!
சாதி மதங்கள் பார்க்கப்பட்டன!
காசு க்ல்விக்கு காணிக்கையாக்கப்பட்டன!
கல்லூரியின் கதவுகள் திறக்கப்பட்டன!
கனவுகள் மிதந்தன பெற்றவள் நினைவில்!
மாணவன் கண்களிலோ வண்ணக் கனவுகள்!
வேண்டாத செயல்கள் அவனுக்கு
விருப்பமாயின!
வேடிக்கை நிகழ்வுகள் அவனின்
வாடிக்கையாயின!
'காதல்' எனும் மாயை அவனை
ஆட்கொண்டது!
'காதல்' அவனுக்கு வேதமாயிற்று!
அம்பிகாபதியும் அமராவதியும்
அவனின் ஆசானானார்கள்!
விளைவு!
கல்வி அவனுக்குக் கசந்தது!
கல்லூரியைக் கண்டாலே வெறுப்பாயிற்று
'மாயை'யிலிருந்து விடுபட்டபோது
காலம் கடந்திருந்தது!
கல்வி அவனை ஒதுக்கியது!
கல்லூரி அவனை விலக்கியது!
பெற்றோர்களுக்கோப் பெரும் இடி!
பேரதிர்ச்சியால் அவன் மனதில் பலத்த அடி!
காரணம் பலகூறப் பற்கள் அசைந்தன!
காலம் பதில் கூறியது!
ஆம்!
காலான் அவனை அழைத்துக் கொண்டான்!
கண்ணீர் கசிந்தன பெற்றோர் கண்களில்!
------> பொன்.ஞானப்பிரகாஷ்.
No comments:
Post a Comment