கவிதை பிறந்த கதை:
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தாயும்.
பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தாயை நினைத்து எழுதியது.
******** அம்மா *********
எந்த மொழிகளாலும்...
எல்லா மொழிகளிலும் உள்ள
அடைமொழிகளாலும் விளக்கிடமுடியாத
அன்பின் இலக்கணம்...
நான்...
பாதுகாப்பாக...சந்தோசமாக....
இருந்த காலம்...
அவள்.. கருவறைக்குள்
இருந்த காலம்.............
ஏழாயிரம் கொடுத்து வாங்கிய
மெத்தை தராது விட்ட
தூக்கத்தை....
என் தாயின் முழங்கைக்
கதகதப்பில் ...உணர்ந்தேன்.
ஆயிரம் கவலைகள் மனதிலிருந்தாலும்
அவள் கைவிரல்கள் என் தலைவருடும்
நேரத்தில் மறப்பேனே இவ்வுலகியல்புகளை
எடுப்பேனே மறுபிறவியொன்றை..
அவள்... பெரும்பாலும்
கோவிலுக்குச் சென்றதில்லை....
ஏனென்றால்... பதிலுக்கு..
சிறிதாய்ப் புன்னகைத்து..
"எங்கடா... நேரம்" என்பாள்.
அவளைப் பொறுத்தவரையில்...
எங்களைப் பேணிக்காப்பதே...
அவள் கடமை ......
நானும் போவதில்லை... ஏனெனில்
தெய்வத்துடன் இருக்கையில்..
பிற வழிபாடுகள்... தேவையில்லை...
பரிசுகள்...பாராட்டுக்கள்..ஏன்
மாநில விருது பெற்றூத்...
திரும்பும்பொழுது கூட..
பதக்கத்தை கையில் வைத்துக்
கொண்டு அவள் கேட்ட் முதல்
கேள்வி......
"சாப்பிட்டியா?"..........
வைரஸ் காய்ச்சலென
நான் படுத்துக்கொள்ள..
இரவு..பகல்.. பாராது..
விழித்திருந்து..நான்
எடுத்த வாந்தியை..
பிடித்தாளய்ய.. கையில்..
பாவி நான்..
தவறுதலாய்..அவள்
எச்சல் டம்ளரில்
காபி கொடுத்தாளென்று.. திட்டியதோ
கொஞ்சமல்ல..
மறந்தேன்.. ஒன்றை..
நானே அவள் எச்ச்ல்தானே.......
அவள் உதிரத்தின் மிச்சம்தானே நான்..
என்னைப் பிரசவிக்க..
நடந்த முயற்சியில்
நஞ்சுக்கொடி சுற்றிக்கொண்டு
சுவாசத்திற்க்கு நான் திணற..
தாயா...சேயா...என
மருத்துவன் கைவிரிக்க....
துணிந்து சொன்னாளாமே..
"குழந்தையைக் காப்பாற்றி
கணவரிடத்திலே கொடுங்களெ"ன்று...
அய்யோ! கடவுளே!...
என்ன தவம் செய்தேன்..
இவள் வயிற்றில் நான்..
பிறக்க........
கல்லுரிக் காலத்தில்
கட்டடித்துவிட்டுச் சென்ற
முதல் சினிமா..
உள்ளம் உறுத்தியதால்..
வீடு வந்ததும்.. நான்
உண்மை சொல்ல
ஆத்திரப்படாமல்.. இரவில்
அருகினில் துங்கும்பொழுது
அவள் சொன்ன..கதை..
அந்த.. திரைப்படத்தையும் மீறி
என்னை யோசிக்க வைத்தது...
விளைவு.. இன்றுவரை...
எதையும்.. மறைத்ததில்லை ...அவளிடத்தில்..
எந்த உடை உடுத்தினாலும்....
"ராசா மாதிரி இருக்கே" என்பாள்.
"எந்த ஊர் ராசா - பீட்டர் இங்லேண்ட்
போட்டிருக்கார்?" என்றால்..
"எனக்கு நீ ராசாதாண்டா" என்பாள்...
முதன்முறை பெங்களூர்
பயணித்த பதிமூன்றூ மணிநேரத்தில்..
பதினைந்து கைபேசி அழைப்புக்கள்..
"எங்கடா இருக்கே?.. சாப்பிட்டியா"...
எங்கள் வீட்டில்... பெண் குழந்தைகள்
இல்லை.. அதனால்..அம்மாவே
என் சகோதரியாய்... தோழியாய்..
என் குழந்தையாய்..குமரியாய்..
எதிர்வீட்டுச் சிறுவனுடன்
பக்கத்து பள்ளிமைதானத்தில்
விளையாட்டாய்... நான் இருக்க..
ஏதோ விபரீதமென்று பயந்தவள்... பின்
விபரமறிந்து..மைதானத்திற்கே வந்து
விளாசினாளே.. வீடுவரை...
"போவியா? சொல்லாம போவியா?
என்று...
அழுதுகொண்டெ அப்பாவிடம்..
குறைகூற..முதுகைத் தடவியவாறு..
சொன்னரே.. அப்பா...
"டேய்.. அம்மாடா... அவளுக்கு
பாசத்தைக் கூட கோவமாத்தாண்டா
காட்டத் தெரியும்... பாவம்டா"
ஆனாலும் சமாதானமாகாமல்...
சாப்பிடாது..நான் தூயில்கொள்ள
முயற்ச்சிக்க....
அருகே அமர்ந்து என்னை
அரவனைத்து...என் கண்ணீர்...
துடைத்தபடி...அவள் அழுதாளே..
"நீ காணமாப்போயிட்டியோன்னு..
அம்மா பயந்துட்டேண்டா....."
செல்லமாய்க் கோபித்தவாறே..
அப்பாவிடம் சொல்வாள்.....
"மாமியார்க் கொடுமையைக் கூட
அனுபவிச்சதில்லைங்க...இவன்
கொடுமை தாங்கலை..."
சரியான நேரத்தில்..
சரியான வயதில்..
சரியான விசயத்தைச் சொல்லிக்கொடுத்த
பல்கலைக் கழகம் அவள்...
"பக்கத்து வீட்டு விஜி
பெரிய மனுசி ஆயிட்டாடா"
"இல்லம்மா..அவ என்னைவிட
உயரம் கம்மி..அப்புறம் ஏன்
பெரிய மனுசின்னு சொல்றே??"
அப்பாவியாய் நான்...
"இல்லடா..அப்பிடின்னா...."
உலக விசயங்களையும்..
தன் அனுபவங்களையும்..
சமமாய்ப் பகிர்ந்தளித்தாள்.
"உனக்கு ஒரு நல்ல பொண்ணா
பார்க்கணுண்டா...
நம்ம ரேகாவையே கல்யாணம்
பண்ணிக்கிறியா? - என்னை மாதிரியே
உன்னை பத்திரமா பாத்துப்பா.."
நானும் பிள்ளையாரைப் போல்தான்..
அவனோ பெற்றார்களைச் சுற்றி வந்து
பழம் மட்டும் பெற்றான்..
நான் என் அன்னையைப் போல்
குண்ம்கொண்ட ரேகாவைப் பெற்றேன் - மனைவியாய்!
இன்னும்
எவ்வளவோ இருக்கிறது...
என்னம்மாவைப் பற்றிச் சொல்ல...
எதைச் சொல்ல்..
எதை விட....
எனக்குள்ளே குழப்பம்..
எனக்குள்ளே கூச்சம்...
எனக்குள்ளே மகிழ்ச்சி..
எனக்குள்ளே நெகிழ்ச்சி..
எனக்குள்ளே அன்பு...
எனக்குள்ளே பாசம்....
எனக்குள்ளே அம்மா .!!!!!.........
--------> பொன்.ஞானப்பிரகாஷ்
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தாயும்.
பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தாயை நினைத்து எழுதியது.
******** அம்மா *********
எந்த மொழிகளாலும்...
எல்லா மொழிகளிலும் உள்ள
அடைமொழிகளாலும் விளக்கிடமுடியாத
அன்பின் இலக்கணம்...
நான்...
பாதுகாப்பாக...சந்தோசமாக....
இருந்த காலம்...
அவள்.. கருவறைக்குள்
இருந்த காலம்.............
ஏழாயிரம் கொடுத்து வாங்கிய
மெத்தை தராது விட்ட
தூக்கத்தை....
என் தாயின் முழங்கைக்
கதகதப்பில் ...உணர்ந்தேன்.
ஆயிரம் கவலைகள் மனதிலிருந்தாலும்
அவள் கைவிரல்கள் என் தலைவருடும்
நேரத்தில் மறப்பேனே இவ்வுலகியல்புகளை
எடுப்பேனே மறுபிறவியொன்றை..
அவள்... பெரும்பாலும்
கோவிலுக்குச் சென்றதில்லை....
ஏனென்றால்... பதிலுக்கு..
சிறிதாய்ப் புன்னகைத்து..
"எங்கடா... நேரம்" என்பாள்.
அவளைப் பொறுத்தவரையில்...
எங்களைப் பேணிக்காப்பதே...
அவள் கடமை ......
நானும் போவதில்லை... ஏனெனில்
தெய்வத்துடன் இருக்கையில்..
பிற வழிபாடுகள்... தேவையில்லை...
பரிசுகள்...பாராட்டுக்கள்..ஏன்
மாநில விருது பெற்றூத்...
திரும்பும்பொழுது கூட..
பதக்கத்தை கையில் வைத்துக்
கொண்டு அவள் கேட்ட் முதல்
கேள்வி......
"சாப்பிட்டியா?"..........
வைரஸ் காய்ச்சலென
நான் படுத்துக்கொள்ள..
இரவு..பகல்.. பாராது..
விழித்திருந்து..நான்
எடுத்த வாந்தியை..
பிடித்தாளய்ய.. கையில்..
பாவி நான்..
தவறுதலாய்..அவள்
எச்சல் டம்ளரில்
காபி கொடுத்தாளென்று.. திட்டியதோ
கொஞ்சமல்ல..
மறந்தேன்.. ஒன்றை..
நானே அவள் எச்ச்ல்தானே.......
அவள் உதிரத்தின் மிச்சம்தானே நான்..
என்னைப் பிரசவிக்க..
நடந்த முயற்சியில்
நஞ்சுக்கொடி சுற்றிக்கொண்டு
சுவாசத்திற்க்கு நான் திணற..
தாயா...சேயா...என
மருத்துவன் கைவிரிக்க....
துணிந்து சொன்னாளாமே..
"குழந்தையைக் காப்பாற்றி
கணவரிடத்திலே கொடுங்களெ"ன்று...
அய்யோ! கடவுளே!...
என்ன தவம் செய்தேன்..
இவள் வயிற்றில் நான்..
பிறக்க........
கல்லுரிக் காலத்தில்
கட்டடித்துவிட்டுச் சென்ற
முதல் சினிமா..
உள்ளம் உறுத்தியதால்..
வீடு வந்ததும்.. நான்
உண்மை சொல்ல
ஆத்திரப்படாமல்.. இரவில்
அருகினில் துங்கும்பொழுது
அவள் சொன்ன..கதை..
அந்த.. திரைப்படத்தையும் மீறி
என்னை யோசிக்க வைத்தது...
விளைவு.. இன்றுவரை...
எதையும்.. மறைத்ததில்லை ...அவளிடத்தில்..
எந்த உடை உடுத்தினாலும்....
"ராசா மாதிரி இருக்கே" என்பாள்.
"எந்த ஊர் ராசா - பீட்டர் இங்லேண்ட்
போட்டிருக்கார்?" என்றால்..
"எனக்கு நீ ராசாதாண்டா" என்பாள்...
முதன்முறை பெங்களூர்
பயணித்த பதிமூன்றூ மணிநேரத்தில்..
பதினைந்து கைபேசி அழைப்புக்கள்..
"எங்கடா இருக்கே?.. சாப்பிட்டியா"...
எங்கள் வீட்டில்... பெண் குழந்தைகள்
இல்லை.. அதனால்..அம்மாவே
என் சகோதரியாய்... தோழியாய்..
என் குழந்தையாய்..குமரியாய்..
எதிர்வீட்டுச் சிறுவனுடன்
பக்கத்து பள்ளிமைதானத்தில்
விளையாட்டாய்... நான் இருக்க..
ஏதோ விபரீதமென்று பயந்தவள்... பின்
விபரமறிந்து..மைதானத்திற்கே வந்து
விளாசினாளே.. வீடுவரை...
"போவியா? சொல்லாம போவியா?
என்று...
அழுதுகொண்டெ அப்பாவிடம்..
குறைகூற..முதுகைத் தடவியவாறு..
சொன்னரே.. அப்பா...
"டேய்.. அம்மாடா... அவளுக்கு
பாசத்தைக் கூட கோவமாத்தாண்டா
காட்டத் தெரியும்... பாவம்டா"
ஆனாலும் சமாதானமாகாமல்...
சாப்பிடாது..நான் தூயில்கொள்ள
முயற்ச்சிக்க....
அருகே அமர்ந்து என்னை
அரவனைத்து...என் கண்ணீர்...
துடைத்தபடி...அவள் அழுதாளே..
"நீ காணமாப்போயிட்டியோன்னு..
அம்மா பயந்துட்டேண்டா....."
செல்லமாய்க் கோபித்தவாறே..
அப்பாவிடம் சொல்வாள்.....
"மாமியார்க் கொடுமையைக் கூட
அனுபவிச்சதில்லைங்க...இவன்
கொடுமை தாங்கலை..."
சரியான நேரத்தில்..
சரியான வயதில்..
சரியான விசயத்தைச் சொல்லிக்கொடுத்த
பல்கலைக் கழகம் அவள்...
"பக்கத்து வீட்டு விஜி
பெரிய மனுசி ஆயிட்டாடா"
"இல்லம்மா..அவ என்னைவிட
உயரம் கம்மி..அப்புறம் ஏன்
பெரிய மனுசின்னு சொல்றே??"
அப்பாவியாய் நான்...
"இல்லடா..அப்பிடின்னா...."
உலக விசயங்களையும்..
தன் அனுபவங்களையும்..
சமமாய்ப் பகிர்ந்தளித்தாள்.
"உனக்கு ஒரு நல்ல பொண்ணா
பார்க்கணுண்டா...
நம்ம ரேகாவையே கல்யாணம்
பண்ணிக்கிறியா? - என்னை மாதிரியே
உன்னை பத்திரமா பாத்துப்பா.."
நானும் பிள்ளையாரைப் போல்தான்..
அவனோ பெற்றார்களைச் சுற்றி வந்து
பழம் மட்டும் பெற்றான்..
நான் என் அன்னையைப் போல்
குண்ம்கொண்ட ரேகாவைப் பெற்றேன் - மனைவியாய்!
இன்னும்
எவ்வளவோ இருக்கிறது...
என்னம்மாவைப் பற்றிச் சொல்ல...
எதைச் சொல்ல்..
எதை விட....
எனக்குள்ளே குழப்பம்..
எனக்குள்ளே கூச்சம்...
எனக்குள்ளே மகிழ்ச்சி..
எனக்குள்ளே நெகிழ்ச்சி..
எனக்குள்ளே அன்பு...
எனக்குள்ளே பாசம்....
எனக்குள்ளே அம்மா .!!!!!.........
--------> பொன்.ஞானப்பிரகாஷ்
No comments:
Post a Comment