About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கணிப்பொறியுகத்தில் நான் ----> ******* அவள்.. *******

கவிதை பிறந்த கதை:
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தாயும்.

பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தாயை நினைத்து எழுதியது.


******* அவள்.. **********

வேலை நிமித்தமாய்..
வேறுதேசம் சென்று
ஆண்டுகள் சில
ஆனபிறகு திரும்பிய நாளது..

என்னை எதிர்பாராது....
எதையோ எதிர்பார்த்துக்
காத்திருக்கும்...உறவுகள்...

"எப்பிடி இருந்தது வெளிநாடெல்லாம்?"
என்பதிலுக்குக் காத்திராமல்..
என்பெட்டியை ஊடுருவும்
மாமாவின் கண்கள்.......

"அங்கே தங்கம் விலையெல்லாம்
கம்மியாமே?!!" ...தன்கை
கண்ணாடி வளையலை தடவியபடி
தமக்கை....

"மொபைல் வாங்கினியாணா?"
கல்லூரிக் கனவுகளுடன் தம்பி...

"செட்டியாருக்கு இந்தமாசம்
வட்டி குடுக்கலை"
கேள்விக்குறியுடன் அப்பா.

எல்லோருக்கும் பின்னாலிருந்து
என்னை ஏக்கமாய்க்..
கலங்கிய கண்களுடன்
பார்த்துக் கொண்டே..
"சாப்பிட்டியாப்பா?...
சாதம் போடட்டுமா?" என்றவள்
அம்மா!.

 ---------> பொன்.ஞானப்பிரகாஷ்.

1 comment: