About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

"தமுஎச" வில் நான் --> **** ஒரு கொடியின் நிறம்! ****

கவிதை பிறந்த கதை:
************************
 இந்தக் கவிதை(?!!) என்னுடைய கல்லூரிக் காலத்தில் நான் எழுதி..பின் ..
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கதின் அருப்புக்கோட்டை நகரக்கிளையில் இனணைந்து ஒரு தளிராய் வளர்ந்து கொண்டிருந்த

ஆரம்பக்காலத்தில்(கி.பி 1997ல்) ..நான் பகிர்ந்து கொண்டது,

ஒரு கொடியின் நிறம்!
==================
விளக்கங்கேட்டதற்கு
விளக்கிச் சொன்னார்கள்!

சிவப்பு நிறம்
இந்துச் சாமியார்களின்
செந்நிற ஆடை
என்றும்...


வெண்மை நிறம்
கிறித்துவப் பாதிரியார்களின் தூய அங்கி
என்றும்...


பச்சைநிறம்
முகம்மது நபியின் மதங்காட்டும் நிறம்
என்று!

ஆனால் உண்மையில்
ஆராய்ந்து பார்த்தால்.....


சிவப்பு நிறம்
மதவெறியியால் மாண்டுபோன
மனிதர்களின் இரத்தத்தையும்


வெண்மை நிறம்..
அம்மாண்டுபோன மனிதர்களின்
விதவை மனைவிகளின்
வெள்ளைச் சேலையையும்


பச்சை நிறம்...
மதம்பிடித்துத் திரியும்
மதவெறியர்களில்
அழிந்துபோன
பச்சிளங்குழந்தைகளையும்
பசுமையான வயல்களையுமே
காட்டுகின்றது!
        
               ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment