கவிதை பிறந்த கதை:
************************
இனக்கவர்ச்சிகும்...நல்ல நட்பிற்க்கும்...காதலுக்கும்...வித்தியாசம் தெரியாமல் பெண்கள் சிறிது பேசிச் சிரித்தாலே..தவறாய்ப்
புரிந்துகொள்ளும் இளைஞர்களுக்கும்...அந்த இளைஞர்களை சரியாய் இனம்கண்டுகொண்டு தங்களுடைய தேவைகளைத் தீர்த்துக்
கொள்ளும் இளைநிகளுக்கும்... இந்தக் கவிதை சமர்ப்பணம்.........
******* உண்ணாம...திண்ணாம ***************
எல்லாமே நன்றாய்தானிருந்தது..
பணிநிமித்தமாய் பரிச்சியமென்றாலும்..
பார்த்த உடனே பிடித்துப்போனது.
எப்போது பேசினாலும்..
என்ன பேசினாலும்..
எதிர்ப்பே இல்லாமல்..
எதிர்பார்ப்பில்லாமல் பதிலளிப்பாள்.
நுனிநாக்கு ஆங்கிலம்...
எதிர்பாராமல் படும் விரல்களின்
ஸ்பரிசம்...
அவளுடன் அருந்தும்
தேநீர் கூடத் தேனாய்......
எல்லாமே நன்றாய்தானிருந்தது..
"புரட்டாசி சனிக்கிழமை..
பெருமாள் கோவில் போயிட்டு
வாப்பா" - அம்மாவின் வேண்டுகோள்.
"நாளைக்கி ஷாப்பிங் போனும்
வர்றீங்களா?"
"போலாமே"....
பெருமாளை பார்த்துக்கொள்ள..
ஆண்டாள் இருகிறாள்..
ஆனால்...அவளை...
"முதல்ல மாயாஜால் போலாம்"
மொழிபுரியாத படத்திற்க்கு
ஆனசெலவு ஜந்நுற்றைம்பது..
ஆனாலும் அவளுடன்
பார்தத முதல் படம்...
ஆறுதல் கொண்டேன்..
"சரியா பசிக்க்லை..
லைட்டா "சப்வே"ல சாப்பிடலாம்"
பர்கரும்..பீட்ஸாவும் என
வந்த பில் தொகை நானுறு...
"அண்ணாச்சிக் கடையில
எண்ணுறு பாக்கி"
அம்மாவின் குரல்...மனதிற்க்குள்.
மாதந்தோறும் வாங்கும்
மளிகைக்கே எண்ணுறுதானம்!!.
ஆனாலும் சாப்பிட்டது
அவள்...!
அதுவும் நன்றாய்தானிருந்தது..
"ஸ்பென்சர் போலாம்"
போனோம்.
பல கடைகள்....
பார்வையிலேயே தேடினாள்..
நிழலெனப் பின்னால் நான்..
"த்ர்ஸ்டியா இருக்கு"
குளிர்பானத்திற்க்குப் பின்
கோல்டு காபியும்..
இன்னொரு கையில் ஜஸ்கீரிமும்..
இதில் கரைந்து போனது நானும்..பணமும்..
ஆனாலும் நன்றாய்தானிருந்தது..
இறுதி முடிவெடுத்து பின்
வாங்கியதென்னவோ நகவெட்டிதான்..
அவள் நகத்துணுக்கில் விரைவில்
அழுக்குச் சேர
ஆண்டவனை வேண்டிக்கொண்டேன்..
ஏனெனில் வெட்டும்பொழுதெல்லாம்
என்நினைவு வரவேண்டுமல்லவா...
ஆக மொத்தம்
ஆயிரத்து எண்ணூறூ...
அவளுக்காக..பரவாயில்லை
அவளுக்காகத்தான்..எல்லாமே
"இரெண்டு மாச பாக்கி தம்பி"
கேள்விக்குறியுடன்
அண்ணாச்சி மனதில்...
எல்லாமே நன்றாய்த்தானிருந்தது..
அதுவரையில்..
கிளம்பும்பொழுது சொன்னாள்...
"போயிட்டு வர்றேங்கண்ணா"
இடியை என் இதயத்திலே
இறக்கிவிட்டு மின்னலென மறைந்தாள்..
அப்போது கூட
ஆட்டோவுக்கு நான்தான்...
அதுயெப்படியடி...........
மூச்சுக் காற்றுகள் உரசிக்கொள்ளும்
தூரத்திலெயமர்ந்து
மொழிதெரியாத படத்தை
பார்த்தபொழுது வராத..
பாசம்.....
பசியேயில்லாமல்...பகட்டுக்காக..
பர்கரும்..பீட்ஸாவுமாய்
புசித்தபோது வராத
பாசம்....
தெருமுனை வளையல்கடை
தவிர்த்து..நகவெட்டி வாங்க
ஸ்பென்சர் வரை
வந்தும்... வராத பாசம்..
எப்படியெடி தேவைகள்
தீர்ந்ததும்.ஊற்றெடுத்தது?!!!!!!!...
இதில் தவறு யார்மீது...
"குருடனுக்கு ஒரே மதி"
--- தவறு என் மீதா?
"காற்றூள்ள போதே
தூற்றிக்கொண்ட" அவள் மீதா?!!
"உண்ணாம..திண்ணாம...
அண்ணாமலைக்குப் பறிகொடுத்தானே
அரோகரா" - அண்ணாச்சியின் புலம்பல்..
யார்மீது தவறு...இந்த
வயதின் மீதா.....அல்லது
வயது தந்த வாலிபத்தின் மீதா....
ஆதலால் இளைஞர்களே...
பகுத்தறிவோடிருங்கள்..
பக்குவப்படுங்கள்...
இறுதியாய் ஒன்று....
மனதைத் திறந்து வையுங்கள்..
மணிபர்ஸ்கள் மூடியே இருக்கட்டும்..........
--------> பொன்.ஞானப்பிரகாஷ்.
************************
இனக்கவர்ச்சிகும்...நல்ல நட்பிற்க்கும்...காதலுக்கும்...வித்தியாசம் தெரியாமல் பெண்கள் சிறிது பேசிச் சிரித்தாலே..தவறாய்ப்
புரிந்துகொள்ளும் இளைஞர்களுக்கும்...அந்த இளைஞர்களை சரியாய் இனம்கண்டுகொண்டு தங்களுடைய தேவைகளைத் தீர்த்துக்
கொள்ளும் இளைநிகளுக்கும்... இந்தக் கவிதை சமர்ப்பணம்.........
******* உண்ணாம...திண்ணாம ***************
எல்லாமே நன்றாய்தானிருந்தது..
பணிநிமித்தமாய் பரிச்சியமென்றாலும்..
பார்த்த உடனே பிடித்துப்போனது.
எப்போது பேசினாலும்..
என்ன பேசினாலும்..
எதிர்ப்பே இல்லாமல்..
எதிர்பார்ப்பில்லாமல் பதிலளிப்பாள்.
நுனிநாக்கு ஆங்கிலம்...
எதிர்பாராமல் படும் விரல்களின்
ஸ்பரிசம்...
அவளுடன் அருந்தும்
தேநீர் கூடத் தேனாய்......
எல்லாமே நன்றாய்தானிருந்தது..
"புரட்டாசி சனிக்கிழமை..
பெருமாள் கோவில் போயிட்டு
வாப்பா" - அம்மாவின் வேண்டுகோள்.
"நாளைக்கி ஷாப்பிங் போனும்
வர்றீங்களா?"
"போலாமே"....
பெருமாளை பார்த்துக்கொள்ள..
ஆண்டாள் இருகிறாள்..
ஆனால்...அவளை...
"முதல்ல மாயாஜால் போலாம்"
மொழிபுரியாத படத்திற்க்கு
ஆனசெலவு ஜந்நுற்றைம்பது..
ஆனாலும் அவளுடன்
பார்தத முதல் படம்...
ஆறுதல் கொண்டேன்..
"சரியா பசிக்க்லை..
லைட்டா "சப்வே"ல சாப்பிடலாம்"
பர்கரும்..பீட்ஸாவும் என
வந்த பில் தொகை நானுறு...
"அண்ணாச்சிக் கடையில
எண்ணுறு பாக்கி"
அம்மாவின் குரல்...மனதிற்க்குள்.
மாதந்தோறும் வாங்கும்
மளிகைக்கே எண்ணுறுதானம்!!.
ஆனாலும் சாப்பிட்டது
அவள்...!
அதுவும் நன்றாய்தானிருந்தது..
"ஸ்பென்சர் போலாம்"
போனோம்.
பல கடைகள்....
பார்வையிலேயே தேடினாள்..
நிழலெனப் பின்னால் நான்..
"த்ர்ஸ்டியா இருக்கு"
குளிர்பானத்திற்க்குப் பின்
கோல்டு காபியும்..
இன்னொரு கையில் ஜஸ்கீரிமும்..
இதில் கரைந்து போனது நானும்..பணமும்..
ஆனாலும் நன்றாய்தானிருந்தது..
இறுதி முடிவெடுத்து பின்
வாங்கியதென்னவோ நகவெட்டிதான்..
அவள் நகத்துணுக்கில் விரைவில்
அழுக்குச் சேர
ஆண்டவனை வேண்டிக்கொண்டேன்..
ஏனெனில் வெட்டும்பொழுதெல்லாம்
என்நினைவு வரவேண்டுமல்லவா...
ஆக மொத்தம்
ஆயிரத்து எண்ணூறூ...
அவளுக்காக..பரவாயில்லை
அவளுக்காகத்தான்..எல்லாமே
"இரெண்டு மாச பாக்கி தம்பி"
கேள்விக்குறியுடன்
அண்ணாச்சி மனதில்...
எல்லாமே நன்றாய்த்தானிருந்தது..
அதுவரையில்..
கிளம்பும்பொழுது சொன்னாள்...
"போயிட்டு வர்றேங்கண்ணா"
இடியை என் இதயத்திலே
இறக்கிவிட்டு மின்னலென மறைந்தாள்..
அப்போது கூட
ஆட்டோவுக்கு நான்தான்...
அதுயெப்படியடி...........
மூச்சுக் காற்றுகள் உரசிக்கொள்ளும்
தூரத்திலெயமர்ந்து
மொழிதெரியாத படத்தை
பார்த்தபொழுது வராத..
பாசம்.....
பசியேயில்லாமல்...பகட்டுக்காக..
பர்கரும்..பீட்ஸாவுமாய்
புசித்தபோது வராத
பாசம்....
தெருமுனை வளையல்கடை
தவிர்த்து..நகவெட்டி வாங்க
ஸ்பென்சர் வரை
வந்தும்... வராத பாசம்..
எப்படியெடி தேவைகள்
தீர்ந்ததும்.ஊற்றெடுத்தது?!!!!!!!...
இதில் தவறு யார்மீது...
"குருடனுக்கு ஒரே மதி"
--- தவறு என் மீதா?
"காற்றூள்ள போதே
தூற்றிக்கொண்ட" அவள் மீதா?!!
"உண்ணாம..திண்ணாம...
அண்ணாமலைக்குப் பறிகொடுத்தானே
அரோகரா" - அண்ணாச்சியின் புலம்பல்..
யார்மீது தவறு...இந்த
வயதின் மீதா.....அல்லது
வயது தந்த வாலிபத்தின் மீதா....
ஆதலால் இளைஞர்களே...
பகுத்தறிவோடிருங்கள்..
பக்குவப்படுங்கள்...
இறுதியாய் ஒன்று....
மனதைத் திறந்து வையுங்கள்..
மணிபர்ஸ்கள் மூடியே இருக்கட்டும்..........
--------> பொன்.ஞானப்பிரகாஷ்.
No comments:
Post a Comment