**** கவிதை ****
கவிதை எழுத வேண்டும்
என்றார்கள்!
''கவிதையா?''- இத்தருமமிகு
தமிழ்நாட்டில் கவிதைக்கா பஞ்சம்!
எடுத்தேன் எழுதுகோலை!
எழுதினேன் கல்வியின் கவலநிலைப் பற்றி!
எழுதினேன் அரசியலின் அவலநிலைப் பற்றி!
இடம்பெற்றன! ஆம்!
இடம்பெற்றன!அலுவலகக் குப்பைக் கூடையில்!
கலங்கினேன்! தெளிந்தேன்!
கற்பனைக் குதிரையைத்தட்டிவிட்டேன்!
கவிகள் சீறிப்பாய்ந்தன!
பரிசுகள் பலபெற்றன!
கவிக்கடவுள் என்றனர்!
கவி இளவரசனானேன்!
புரியவில்லை இந்தபட்டங்களை பற்றி!
புரிந்தது இவ்வுலகைப் பற்றி!
----------> பொன்.ஞானப்பிரகாஷ்.
கவிதை எழுத வேண்டும்
என்றார்கள்!
''கவிதையா?''- இத்தருமமிகு
தமிழ்நாட்டில் கவிதைக்கா பஞ்சம்!
எடுத்தேன் எழுதுகோலை!
எழுதினேன் கல்வியின் கவலநிலைப் பற்றி!
எழுதினேன் அரசியலின் அவலநிலைப் பற்றி!
இடம்பெற்றன! ஆம்!
இடம்பெற்றன!அலுவலகக் குப்பைக் கூடையில்!
கலங்கினேன்! தெளிந்தேன்!
கற்பனைக் குதிரையைத்தட்டிவிட்டேன்!
கவிகள் சீறிப்பாய்ந்தன!
பரிசுகள் பலபெற்றன!
கவிக்கடவுள் என்றனர்!
கவி இளவரசனானேன்!
புரியவில்லை இந்தபட்டங்களை பற்றி!
புரிந்தது இவ்வுலகைப் பற்றி!
----------> பொன்.ஞானப்பிரகாஷ்.
No comments:
Post a Comment