About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கல்லூரிக் காலங்கள் --> **** ஜாதி (வி)ஒழிப்புணர்வு ****

ஜாதி ஒ(வி)ழிப்புணர்வு
பற்றிய கூட்டம்!
முதலில் பேசியவனுக்கு
ஒரு சிலர்
மட்டும் கைதட்டினார்கள்!

அடுத்து
பேசியவனுக்கும் ஒருசிலர்
மட்டும் கைத்தட்டினார்கள்!
விசாரித்ததில் விவரம்
தெரிந்தது!

அவனவன் சாதிக்காரனுக்கு
மட்டும்
கைத்தட்டினார்களென்று!

இறுதியில்
பேசியவனுக்கு எவருமே
கைதட்டவில்லை!

ஏனென்றால்
அவன் பேசியது
ஜாதி ஒழிப்புணர்வு
பற்றி!

        
         ------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment