கவிதை பிறந்த கதை:
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தாயும்.
பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தாயை நினைத்து எழுதியது.
******* அவள்.. **********
வேலை நிமித்தமாய்..
வேறுதேசம் சென்று
ஆண்டுகள் சில
ஆனபிறகு திரும்பிய நாளது..
என்னை எதிர்பாராது....
எதையோ எதிர்பார்த்துக்
காத்திருக்கும்...உறவுகள்...
"எப்பிடி இருந்தது வெளிநாடெல்லாம்?"
என்பதிலுக்குக் காத்திராமல்..
என்பெட்டியை ஊடுருவும்
மாமாவின் கண்கள்.......
"அங்கே தங்கம் விலையெல்லாம்
கம்மியாமே?!!" ...தன்கை
கண்ணாடி வளையலை தடவியபடி
தமக்கை....
"மொபைல் வாங்கினியாணா?"
கல்லூரிக் கனவுகளுடன் தம்பி...
"செட்டியாருக்கு இந்தமாசம்
வட்டி குடுக்கலை"
கேள்விக்குறியுடன் அப்பா.
எல்லோருக்கும் பின்னாலிருந்து
என்னை ஏக்கமாய்க்..
கலங்கிய கண்களுடன்
பார்த்துக் கொண்டே..
"சாப்பிட்டியாப்பா?...
சாதம் போடட்டுமா?" என்றவள்
அம்மா!.
---------> பொன்.ஞானப்பிரகாஷ்.
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தாயும்.
பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தாயை நினைத்து எழுதியது.
******* அவள்.. **********
வேலை நிமித்தமாய்..
வேறுதேசம் சென்று
ஆண்டுகள் சில
ஆனபிறகு திரும்பிய நாளது..
என்னை எதிர்பாராது....
எதையோ எதிர்பார்த்துக்
காத்திருக்கும்...உறவுகள்...
"எப்பிடி இருந்தது வெளிநாடெல்லாம்?"
என்பதிலுக்குக் காத்திராமல்..
என்பெட்டியை ஊடுருவும்
மாமாவின் கண்கள்.......
"அங்கே தங்கம் விலையெல்லாம்
கம்மியாமே?!!" ...தன்கை
கண்ணாடி வளையலை தடவியபடி
தமக்கை....
"மொபைல் வாங்கினியாணா?"
கல்லூரிக் கனவுகளுடன் தம்பி...
"செட்டியாருக்கு இந்தமாசம்
வட்டி குடுக்கலை"
கேள்விக்குறியுடன் அப்பா.
எல்லோருக்கும் பின்னாலிருந்து
என்னை ஏக்கமாய்க்..
கலங்கிய கண்களுடன்
பார்த்துக் கொண்டே..
"சாப்பிட்டியாப்பா?...
சாதம் போடட்டுமா?" என்றவள்
அம்மா!.
---------> பொன்.ஞானப்பிரகாஷ்.