About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கணிப்பொறியுகத்தில் நான் ---->*** காத்திருக்கிறேன் அவளுக்காக ****

கவிதை பிறந்த கதை:
************************
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் இரண்டாம் கட்டம் என்று சொல்லப் படுவது வழக்கம்.
என்னைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் உள்ளங்கைக் கதகதப்பில் இருந்துவிட்டு உலக வாழ்க்கையில்
அடியெடுத்து வைக்கும் தருணமே திருமணப் பருவம். அப்படிப் பட்ட தருணத்திற்க்காக நான் காத்திருந்த
நேரத்திலெ எழுதிய கவிதை இது. என்னுடைய திருமண நாள் 03-Sep-2008.


*** காத்திருக்கிறேன் அவளுக்காக ****

இன்னும் ஓரிரு நாட்கள்...
இந்த துனையில்லாத..தனித்த
வாழ்க்கையின் முடிவுக்காலம்...

இஷ்டம் போல் வீடு திரும்பி..
முறையான
உணவு தவிர்த்து...உறக்கம் தவிர்த்து..
விடுமுறை நாளா...
நண்பகல் வரை தூங்கி...பின்
நானும் எழுந்து ...
நண்ப்ர்களை எழுப்பி..
குளித்துக் கிளம்பி..

"எங்க போறது?"
"தெரியலை...முதல்ல ரூமப்பூட்டு..
திருவான்மியூர் பஸ் ஸ்டாண்ட் போலாம்
அப்புறம் யோசிப்போம்"
பேருந்து வர.."மௌண்ட்ரோடு போலாம்"

பல படங்களின் கதை
பற்றி யோசித்து...அலசி ஆராய்ந்து..
பின் கதையில்லாத படம் பார்த்து
வெளியே வந்து புலம்பி
"நல்லவேளை..தியேட்டர்ல ஓரமா
இருட்டுல உட்கார்ந்தோம்..
இல்லைன்னா..விக்ரம் நம்மளையும்
சுட்டிருப்பான்..."
"சரி விடுங்க.. இனிமே தமிழ்ப்
படம் பாக்கிறதில்லை..இது
இந்த தியேட்டர் மேல சத்தியம்.."

"சரி..பீச் போலாம்"
கடலலையில்..கலையாத
வீடு கட்டி...
"எனக்கு பஜ்ஜி..
வினோத்க்கு ஸ்வீட்கார்ன்"

கணணித் துறையின் வளர்ச்சி
கலாச்சார சீரழிவு.....
விஞ்ஞானம் பற்றி வியந்து....
அரசியல் வியாதிகள்.. என
ஆவேசமாய்ப் பேசும்பொழுதே....
"அங்க பாருங்க.. அந்தப் பச்சை....
உங்களையே பார்க்கிறமாதிரி..."
உடனே நாடு மறந்து..வீடு மறந்து...
"எங்கடா"
உடனே "ஜொள்ளு விடுவீங்களே.."
சரி..டின்ன்ர் எங்கே?
"செட்டிநாடு ட்ரீட்".......

"சரி அப்புறம்"
"ட்ரைவ் இன் போலாம்"
"படத்துக்கே போக்கூடாதுன்னு..ஒரு
மானஸ்தன் சத்தியம் பணிணானே"

"அது அந்த தியேட்டர்மேல தான"

படம் முடித்து..
ஊரே உறங்கும் பொழுது....
நள்ளிரவு வீடு திரும்பி..
"தூக்கம் வராது.. பக்கத்து ரூம் ரோசன்கிட்ட
எதாவது சிடி இருந்தா வாங்கு...."

சுகமோ..துக்கமோ.. சமமாய்ப் பகிர்ந்து..
"இந்தாங்க டேப்லட்...
இட்லி சாப்ட்டு..அப்புறம்
சாப்பிடுங்க"

புகை பிடிக்காத..
மது..மாது..மாமிசம் உண்ணாத..
வரம்புமீறாத..வாழ்க்கை...

இது எல்லாமே...
இன்னும் ஓரிரு நாள்தான்...
பிறகு...
எனக்கே..எனக்கென்று அவள்..
அவளுக்காய் நான்..
எங்களுக்கென ஓர் உலகம்

அவள்:
"கொஞ்சம் உருளைக்கிழங்கு வேணுங்க..
ராத்திரி தோசை சுடலாங்க...
உமாப்பொண்ணு மயிலாப்பூரா?
இந்த சட்டையை துவைச்சிடலாமா...

நான்:
பீச்சுக்குப் போலாமாடி....
உங்க அம்மாக்கு போன் பண்ணியா?...
சண்டே சம்பத் வருவாண்டி லஞ்சுக்கு
தலைவலியா..தைலம் பூசவா...

அலுவலகப் பரபரப்பின் போது..
"என்னங்க சமைச்சிட்டிருந்தேன்..
கேஸ் காலியாயிடுச்சி"...
"எதுக்குடி காலைல வாந்தியெடுத்த.."

இது...
வாழ்க்கையின் அடுத்த கட்டம்..
மாற்றங்கள் ஒன்றே
மாறாதிருக்கும் இந்த வாழ்க்கையில்..
நம்முடைய ஈடுபாடும்..ரசனையுமே..
நம்மை உண்மையாய் வாழவைக்கும்...

இங்கே இழப்பதெற்கென்று
எதுவுமில்லை.....
கற்றுக்கொள்ளவும்..ரசிக்கவும்
நிறைய்ய்ய்ய்ய் இருக்கிறது...

ஆதலால்..
அவளுக்காக......
காத்திருக்கிறேன்...காதலுடன்..
இதோ தொட்டுவிடும் துரத்தில்
செப்டம்பர் 3..........

வாருங்கள் நண்பர்களே.........
வாழ்த்துவதற்க்கு..
வாழ்ந்துதான் பார்க்கலாம்.....

     என்றும் நட்புடன்
             ---------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment