About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கணிப்பொறியுகத்தில் நான் ---->*** காத்திருக்கிறேன் அவருக்காக ****

கவிதை பிறந்த கதை:
************************
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் இரண்டாம் கட்டம் என்று சொல்லப் படுவது வழக்கம்.
என்னைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் உள்ளங்கைக் கதகதப்பில் இருந்துவிட்டு உலக வாழ்க்கையில்
அடியெடுத்து வைக்கும் தருணமே திருமணப் பருவம். அப்படிப் பட்ட தருணத்திற்க்காக என்னுடைய தோழி காத்திருந்த
நேரத்திலெ அவர் கேட்டுக் கொண்டதற்க்கிணங்க அவருக்காக நான் எழுதிய கவிதை இது. அவருடைய திருமண நாள் 04-Dec-2008.
       

*** காத்திருக்கிறேன் அவருக்காக ****
அலுவலகத்தின் அறிமுகவிழா..
அலுவலகத்தைப் பற்றி அறிந்த
அன்றே அவரைப் பற்றியும்
அறிந்து கொண்டேன்...
பிரகாசமான பெயர்
"பிரகாஷ்".

ஆகஸ்ட் பதினைந்து.....
பாரதத்திற்கு விடுதலை கிடைத்த
அந்நாளில் ..அவர் மனதிலே
சிறைபட்டுப் போனேன்....
சில நாட்கள் மின்னஞ்சல்..
வாயிலாகத் தொடர்ந்த நட்பு...
பின் புன்சிரிப்பும்...கைபேசியழைப்புமாய்...

என் தாயுமானவளே
எனக்குத் தோழியுமனவள்...
அவளிடத்திலே பகிர்ந்தபொழுது
அன்பொழுகச் சொன்னள்..
"யோசித்துப் பார்
தீர்க்கமான முடிவெடு
எடுத்தபின் திரும்பிப்பார்க்காதே
நம்பிக்கையிருந்தால் நம்பிக் கைபிடி..
அவனே உன் வழித்துணையாகவும்..
வாழ்க்கைத்துனையகவும் இருப்பான்"

எதிபாராதிருந்த ஒரு நாளில்
எதிர்பர்ர்த்திருந்த கேள்வி
அவரிடமிருந்தது.....
"நான் உன்னை நேசிப்பதாய்ச் சொன்னால்
என்ன உன் பதில்?"
ஒரு வரிக்கேள்வியானாலும்
விடை என் வாழ்வல்லவா....

தாயின் ஆலோசனையால்
தயாராய் இருந்தேன்...
முன்பே எடுக்கப் பட்ட
முடிவென்றாலும் சற்றே பதட்டம்தான்.
ஆனாலும் .அவர் முன்மொழிய ..
தாயிடத்திலே பேசுங்கள்" என்று
வழிமொழிந்தேன்.

அவரும் என் தாயும்
பேசிக்கொண்டிருந்த அந்த
தருனத்தில் என் இதயத்துடிப்பை
சிறிது தூரம்வரை இருந்த
எல்லோராலும் கேட்க முடிந்தது

அது பெண்பார்க்கும் படலம் இல்லை
சம்பிரதாயங்கள் இல்லை....
சாஸ்திரங்களும் குறுக்கே இல்லை..
பார்த்தபின்னே முடிவெடுக்கும் பழக்கமும்மில்லை
வீட்டிற்குப் போய்க்கடிதம் போடும்
விடையும் இல்லை.

முடிவாய்..தெளிவாய்..சொன்னார்.
"பிடித்திருக்கிறது..
நம்பிக்கொடுங்கள் ..ஒரு மகனாய்
நானிருப்பேன்" .
 அவ்வளவுதான்..

அதோ..கூப்பிடும் துரத்திலே 
டிசம்பர் 4
இதுவரை .....
நான் காணக்கிடைக்காத
நாட்காட்டியை தேடித் தேடிக்
கிழிக்கின்றேன்
பருவக் காற்றிலே
படபடக்கும் நாட்காட்டியின்
தாள்கள்.. நானும் அப்படித்தான் ..

நாட்கள் நகர நகர
இனம் புரியதொரு உணர்வு..
இந்த வருடம் மட்டும்
அக்டோபருக்குப் பின்
டிசம்பர் வராதா.. என்றொரு ஏக்கம்

இது வாழ்க்கையின்
இன்னொரு கட்டம்...
கனவாய் இருந்த காதல்..
கண்முன்னே நனவாகும் காலமிது

காதல் இங்கே வாழ்க்கையாய்...
காதலன் இங்கே கணவனாய்...

எத்தனையோ திருமணத்தில்
எங்கோயொரு மூலையில்
இருந்த எனக்கு .....
இங்கே திருமணம்
காதலாகிக் கசிந்துருகும் இரு
மனங்களின் திருமணம்
உணர்வுகளை பரிமாறிக்கொள்ள
துவளும்பொழுது தோள்சாய..ஒரு
துணைவரும் நாள் டிசம்பர் 4

இனிமேல் ..டாண்டம் யோசிக்கும்
நேரத்திலே..இரவு உணவு பற்றியும்
யோசித்தாக வேண்டும்.....
"மாவுமிச்சம் இருக்கு தோசை
ஊத்திக்கலமா?" --- நான்
"சண்டே மாயாஜால் போலாமா?
பாரதி" --- அவர்

ஒரு வளமான வாழ்க்கை
காத்திருக்கிறது எனக்காக
வாழ்ந்தாக வேண்டும்
காத்திருக்கிறேன் நானும்
காதலுடன்....." அவருக்காக "
                                                                      
               -----------> பொன்.ஞானப்பிரகாஷ்.   

No comments:

Post a Comment