ஓ! மானிடர்களே!
ஒரு நிமிடம் நில்லுங்கள்!
ஒழுங்காய்ப் புரிந்து கொள்ளுங்கள்
காதலைப் பற்றி!
கண்சிமிட்டுவதும் கட்டுயணைப்பதும்(மே)
காதலல்ல- அது காமம்!
கருவறையினுள் உள்ள தன்
குழந்தையிடம் பாசங்கொள்கிறாளே
ஒருதாய்! -அதுதான் காதல்!
கண்ணெதிரே கண்டிப்பும்
கண்ணயர்ந்ததும் அன்பும் காட்டுகிறாரே
தந்தை- அதற்கு பெயர்தான் காதல்!
நிழல்தரும் மரத்துடன்
மழலைமொழியில் பேசுகிறதே
ஒரு பறவை - அத்ற்குப் பெயர்தான் பறவை!
வான் முகிலும் உயர்மலையும்
தவிப்பாய் தழுவிச் செல்கின்றனவே
அதற்குப் பெயர்தான் காதல்!
அதோ
ஆழ்கடல் தன் அலையனுப்பிக்
கரையைத் தொட்டுத் தொட்டுப்
பேசுகிறதே!
அதற்குப் பெயர்தான் காதல்!
ஈராயிரம் ஆண்டிலும் கூட
இன்னும் பிதற்றுகிறீர்களே
காதலிப்பதாய்!
அது- காதலல்ல! காமம்!
வாலிபத்தின் வெளிப்பாடு!
விதியின் விளையாட்டு!
அவ்வளவே!
இனியேனும்
காதல் என்று சொல்லி
கனவில் மரத்தைச் சுற்றாமல்
மனதைப் பக்குவப்படுத்துங்கள்!
------> பொன்.ஞானப்பிரகாஷ்.
ஒரு நிமிடம் நில்லுங்கள்!
ஒழுங்காய்ப் புரிந்து கொள்ளுங்கள்
காதலைப் பற்றி!
கண்சிமிட்டுவதும் கட்டுயணைப்பதும்(மே)
காதலல்ல- அது காமம்!
கருவறையினுள் உள்ள தன்
குழந்தையிடம் பாசங்கொள்கிறாளே
ஒருதாய்! -அதுதான் காதல்!
கண்ணெதிரே கண்டிப்பும்
கண்ணயர்ந்ததும் அன்பும் காட்டுகிறாரே
தந்தை- அதற்கு பெயர்தான் காதல்!
நிழல்தரும் மரத்துடன்
மழலைமொழியில் பேசுகிறதே
ஒரு பறவை - அத்ற்குப் பெயர்தான் பறவை!
வான் முகிலும் உயர்மலையும்
தவிப்பாய் தழுவிச் செல்கின்றனவே
அதற்குப் பெயர்தான் காதல்!
அதோ
ஆழ்கடல் தன் அலையனுப்பிக்
கரையைத் தொட்டுத் தொட்டுப்
பேசுகிறதே!
அதற்குப் பெயர்தான் காதல்!
ஈராயிரம் ஆண்டிலும் கூட
இன்னும் பிதற்றுகிறீர்களே
காதலிப்பதாய்!
அது- காதலல்ல! காமம்!
வாலிபத்தின் வெளிப்பாடு!
விதியின் விளையாட்டு!
அவ்வளவே!
இனியேனும்
காதல் என்று சொல்லி
கனவில் மரத்தைச் சுற்றாமல்
மனதைப் பக்குவப்படுத்துங்கள்!
------> பொன்.ஞானப்பிரகாஷ்.
No comments:
Post a Comment